ஏப்ரல் 05, 2012

குறளின் குரல் - 3

Twin Tenets for life (Part 2):

Continuing with where I left off yesterday, the 2nd verse I was referring to is here.


Originally posted on 4th April, 2012

22nd June 2013

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
                                  (குறள் 423: அறிவுடமை அதிகாரம்)

Transliteration:

eppoRuL yARyARvAyk kETpinum apporuL
meypporuL kaNba dhaRivu

epporuL – whatever be the statement/assertion/accusation made on a subject
yAr yAr vAi kEtpinum – regardless who says it or how convincing/truthful it appears
apporuL – that subject’s (statement/assertion, sometimes accusations too!)
meipOrul – the true value ( the truth and personal motivations, biases behind statement/assertion/accusation must be considered)
kAnpadh(u) – inquiring, seeking, researching, understanding,realizing
aRivu – is the true wisdom in deciding/doing appropriate course of action (assumed meaning as this kuraL is under “arasiyal” - code of governance)

Wisdom is in deep inquiry of words and intentions
Not in trusting the lips that may utter for deception”

As I already mentioned, this verse seems to be more in the societal context than at the personal level. Though seems applicable and valid for everyone, it is more so for the persons that are in the position of power.

Remember the plight and fate of the Pandya king Neduncheziyan, in the story of anklet (Silappadikaaram)? Blind faith and following are not the ways of wise, but the deep inquiry and considered actions are!

Regardless how believable a source may be, still one must get all the facts straight and make a prudent decision. The men and women of power, must not only be just and wise, but appear to be so too.

When the questioning mind of Nakkeera could stand up against Lord Shiva to clarify the doubts, the position he took was, even if it was the GOD SUPREME, it must be answerable to genuine doubts and cannot take a stance from a high pedestal.

The same quote of “kaNNAL kANbadhum poi, kAdhAl kEtpadhu poI, thIra visArippadE mei” (கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்!) is relevant ad applicable here more in the context of external inquiry rather than internal inquiry.

தமிழிலே:

எப்பொருள்சொல்லப்படும் எந்தவொரு கூற்றையும்
யார்யார்வாய்க் கேட்பினும் - அது எவர் வாயிலிருந்து கேட்கப்பட்டாலும்
அப்பொருள்
 - அக்கூற்றின்
மெய்ப்பொருள் - உண்மைத்தன்மையை (எந்தவித சுயநல நோக்கும் இல்லாத தன்மையை
காண்பது - கண்டு அறிவது
அறிவு - உண்மையான அறிவு ஆகும்

இக்குறளுக்கான விளக்க உரையை முன்பே ( ஏப்ரல் 4, 2012) எழுதிவிட்டதால், இப்போது தமிழ் உரையைமட்டும் சேர்த்துள்ளேன். இக்குறள் ஒரு தனிமனித ஒழுக்க நிலையிலிருந்து எழுதப்படாமல், ஓர் ஆட்சியாளருக்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்ச்சியையொட்டி எழுதப்பட்டதாகவே எண்ணவேண்டும்.

எவ்வளவுதான் நம்பிக்கைக்குரிய மூலம் என்றாலும், ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய பொறுப்பில் இருப்பவர், எல்லா உண்மைகளையும் சேகரித்து அறிந்துகொண்டு, ஆய்ந்து, தகுந்த முடிவினை எடுக்கவேண்டும். நேர்மையும், அறிவாண்மையும் வெளித்தோற்றத்தில் மட்டுமல்லாது, உண்மையிலே அகத்திலும் கொண்டிருக்கவேண்டியவர்கள் அதிகாரத்திலும், ஆளும் பொறுப்பும் உள்ளவர்கள்.

நக்கீரனின் புலமையும், அறிவும், உண்மையும் சிவபெருமானின் கருத்தையே கேள்விகேட்க வைத்தன. அவர் கடவுளர்களின் முழுமுதலாயவர் என்றவரே கொண்டிருந்தாலும். “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரிப்பதே மெய்” என்னும் கூற்றும் இதனாலேயே வந்தது. பொற்கொல்லன் சொல்லைக்கேட்டு ஆராயாமல் உத்தரவிட்ட பாண்டியன் அறிவாண்மை மிக்கவனாயினும், ஒரு சிலமணித்துளிகளில், தவறியதால், கோவலன் மாண்டது, கண்ணகி மதுரையை எரித்ததும் நாமறிவோம்.

“உள்பொருள் இதுவென உணர்தல் ஞானமாம்” என்று சீவக சிந்தாமணியும், “நீயும் கண்டு நுமரொடும் எண்ணி அறிவறிந்தளவல் வேண்டும்” என்று நற்றிணைப்பாடல் வலியுறுத்துவதும் இதைத்தான்.

சொல்பவரின் சமூகத்தில் கீழ் நிலையில் இருந்தாலும் சொல்லப்படும் பொருளின் தரமே கொள்ளப்படவேண்டும் என்றும் பரிமேலழகர் கூறுகிறார்.

இன்றெனது குறள்:

சொல்பவர் வாய்மொழி சோதித் தறிதலன்றி
சொல்லின் தரமறிவ தேது?

Solbavar vAimozhi sOdhith thaRidhalanRi
Sollin tharamaRiva dhEdhu?

குறளில் குரல் - 2

April 3rd  2012,

Twin Tenets for life (Part 1):



எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

                               (குறள் 355: மெய்யுணர்தல் அதிகாரம்)

Transliteration:
eppoRuL yARyARvAyk kETpinum apporuL
meypporuL kaNba dhaRivu

epporuL – whatever be the subject (not to be construed as objects)
eththanmaiththaayinum – regardless how it appeals or appears to our senses
apporuL – that subject’s
meipOrul – the true value ( the true origin of the concept of subject and the purposes there in)
kAnpadh(u) – seeking, researching, realizing
aRivu – is the true awareness, wisdom, jnana (ஞானம்)

The model code for true living is captured in essence, by the two verses in ThirukkuraL. Though they are seemingly same, they are from different chapters belonging to different main headings of Dharma (அறம்) and Artha (பொருள்). The first verse talks about “seeking” at a personal level, mostly for personal elevation and understanding the true nature of things around us. This kuraL comes under, the sub-heading of “thuravu” (renouncing).

At surface level, it is same as “All that glitters is not gold”. Regardless of how things appear to one’s eyes, only truthful seeking will reveal the true being. Here the word “poruL” (பொருள்), does not merely refer to the objects we visualize; It does refer to the concepts, theological and otherwise that we are fed with from the time, we are able to assimilate knowledge. The main purpose is to elevate the “self” as in “உள் ஒளி அடைதல்” (self realization). It does not debase the passed on knowledge but encourages, “Self will” to examine everything given to us – the essence of seeking. Anything that comes close to that is seeking the guidance of knowledgeable ones, and is talked about in “PeriyOrai thunai kOdal” (பெரியோரைத் துணைக் கோடல்).

As the popular tamil adage goes, “kaNNAL kANbadhum poi, kAdhAl kEtpadhu poI, thIra visArippadE mei”
The second tenet is from Arivudamai chapter under (porut pAL – Artha part). Can you guess what that kurAL is?

“Wisdom in any subject is in seeking the true nature
Not in what our eyes capture or mind’s conjecture”

தமிழிலே:
எப்பொருள் - எந்த ஒரு பொருளைச் சொல்லும் கருத்தாகிலும்
எத்தன்மைத்தாயினும் - அது எந்த உருவகத்தில் நம்மறிவுக்குப் புலப்பட்டாலும்
அப்பொருள் - அப்பொருள் சொல்லும் கருத்தின்
மெய்ப்பொருள் - உண்மைத்தன்மையும் (நிலைத்தன்மை)
காண்பது - ஆராய்வது, அறிந்துகொள்வது, உணர்ந்து கொள்வது
அறிவு - உண்மையான அறிவு, ஞானம்

நல்வாழ்க்கைக்கு இரண்டு அடிப்படைக் கோட்பாடுகளைத் திருக்குறளிலிருந்து எல்லோரும் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒன்றே போல் தோன்றினாலும், அவை இரண்டு வெவ்வேறு “பால்”களில் உள்ள அதிகாரங்களில் சொல்லப்படுகின்றன. இக்குறள் அறத்துப்பாலின் மெய்யுணர்தல் அதிகாரத்தில் வருகின்ற ஒன்று. பின்பு பார்க்கப்போகும் குறள் பொருட்பாலின்கண் வருவது. இக்குறள் ஒரு தனிமனிதனைச் சார்ந்து  அவனுக்குத்  தேவையானத் “தேடலை” சொல்கிறது, தனிமனிதனின் ஆத்ம உயர்வுக்காக!

மேம்போக்காகப் படித்தால், இது “மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்ற பழமொழியைச் சொல்லுகிறவொன்று. ஒரு பொருள் (கருத்துக்கூட) ஒளிரும் பொருளாய் தோற்றமளித்தாளும், அப்பொருளின் உண்மைத்தன்மையை அறிவதே அறநெறியும் துறவோர்க்கு அழகுமாம். பொருளைக் கண்ணால் காண்பதுவும், கருத்தாய் கேட்பதுவும் என்று கொள்ளலே இக்குறளுக்குப் பொருந்தும்.

இக்குறள் வலியுறுத்துவதும், “உள்ளொளி” பெருக்கி உயர்வை அடைதலைத்தான். இக்கருத்து நமக்கு வாழையடி வாழையாக வழங்கப்பட்டுவந்திருக்கிற அறக்கோட்பாடுகளுக்கும், மற்ற கருத்துக்களையும் எடுத்துக் கொள்வதைத் தடுக்கவில்லை. எல்லாவற்றையுமே ஆராயும் மனவுறுதியைத்தான் வலியுறுத்துகிறது.  அப்போது ஒரு குருவைச் சார்ந்து பெறும் அறிவுக்குக்கூட இது பொருந்துமா என்கிற கேள்வி எழும்.  பெரியோரைத் துணைக்கோடல் அதிகாரத்தில் அதுவும் கூறப்படுகிறது.

இக்குறளின் அடித்தளக் கருத்து இதுதான். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்!”

இன்றெனது குறள்:

கண்மூடி யாயிராமே கண்மூடி சிந்தித்தால்
கண்ணுறுவாய் உண்மைப் பொருள்

kaNmUDi yAyirAmE kaNmUDi sindhiththAl
kaNNuRuvAi uNmaip poruL

குறளின் குரல் - 1

April 5th 2012,
Morgan Hill

As of the past Monday (2nd April), I wanted to do something useful in Facebook. So, a though crossed my mind to write my perspectives on ThirukkuraL. Though there are many commentaries on ThirukkuraL, I felt that there is a vacuum in giving interpretations based on experiences, observations and comparisons of similar sounding verses.  So, here I am trying to give my perspectives. The idea is to invite feedback on my attempt with the readers comments and compile them as the collective beauty in the eyes of beholders. Though, predominantly I will be writing in English for wider consumption, I will try and edit, this blog as I have time later to give Tamil word by word meaning. 

குறளைப் பற்றி எழுதுவதற்கு முன்பாக, ஒரு சிறப்புக் குறள், இதுவும் குறளின் சிறப்பினப் பற்றிதான்.

(பொதுக் குறள்)

மருளை அழித்து குணத்தை அளிக்கும்
குறளை தினமும்நீ 
ஓது


டிசம்பர் 15,2015-ல் மேற்கண்ட குறளை மாற்றி எழுதியது.


மருளை அழிக்கும் குறளின் அருமை
தெரிந்து தினமும்நீ ஓது

Written on 2nd April:
So, friends online, here is  the voice of Thirukkural that I am planning to share with you all,  one a day at least. Last night, suddenly I woke up around 2pm and pondering over my friends and friendships and realized, how influential they have been in shaping my persona. Many a moments of wonder, bonding, fun, joy, bliss, sharing, caring and some times disillusions, disappointments and even deception. Barter friendships have come my way and have found a way to be out too. 

Here is a dedication to friends allover. 

kuraLin kural: 
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு.
                         - kuraL 786 ( நட்பதிகாரம்)

muga naga - the smile in the face
natpadhu - friendship (that shows a smile in the face)
natpandru - is not always to be construed to be true friendship
nenjaththu - In the heart
aga naga - gladness felt (in the heart)
natpadhu - friendship (that feels glad even when you think of the friend)
natpu - Such friendship is the true and lasting friendship.

Not the sheer smile on the face makes a friend sincere
But, that which makes the heart smile and rejoice is truly dear

இன்றெனது குறள்


நினைதொறும் நெஞ்சினில் விஞ்சும் மகிழ்வின்
அனையது நேரிய நட்பு


பிப்ரவரி 06, 2012

அக்கரைப் பச்சை இக்கரைக்கும் உண்டு, அக்கரையிலிருந்து



அக்கரை என்றுமே பச்சை அதனாலே
அக்கரை நின்றால் அழகாய் தெரியுமே
இக்கரை, நீயுணர என்றும் இனித்திடும்
சக்கரை  போலாகும் வாழ்வு

ஜனவரி 19, 2012

வெண்பா பைத்தியம்…



சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தாற் போல, என்னுடைய நண்பர் இராசா  என்னை வெண்பா இலக்கணம் பற்றி ஏதோ கேட்கப் போக, பரணில் தூங்கிக்கொண்டிருந்த வெண்பா பிசாசு என்னை மீண்டும் பிடிக்க, உடனே ஒரு வெண்பா!


இது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா… வெண்பாக்களுக்கே உரியவை, “இதனால் இது” என்கிற காரண விளக்கங்களும் அல்லது “எதனால் இது” என்கிற கேள்வி-பதில்களும் அல்லது “இவ்வாறிருக்க அவ்வாறு ஏன்” என்கிற காரணம் ஒற்றிய கேள்விகளும்!


அந்த அடிப்படையை ஒட்டித்தான், எண்ணம் எப்படி வாழ்வைப் புதுக்குகிறது என்று எழுதியதும். திருத்தணிகை விசாகப்பெருமாளையர் அவர்கள் எழுதிய யாப்பிலணக்கண நூலைப் ஒருமுறை படித்து சரிபார்த்துக்கொண்டேன்..


பண்ணிலாமல் பாடலுண்டோ கண்ணிலாமல் காட்சியுண்டோ

உண்ணிலார்க்கு ஊட்டமுண்டோ எண்ணிடாது ஏற்றமுண்டோ

வண்ணமுதாம் வாழ்வினிலே எண்ணிறந்த இன்பமுண்டே

எண்ணியென்றும் வாழுவதே வாழ்வு

ஜனவரி 18, 2012

தந்திரப் பேச்சு -- கவிமாமணி இளையவன்



[நான் இரசித்த சில கவிதைகளை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். மின்பெருவெளி  வலையிலே, எத்தனைச் செல்வங்கள் கொட்டிக் கிடக்கின்றன? எத்தனை சிந்தனையாளர்கள் எவ்வளவு இலகுவாக எழுதுகிறார்கள். வெண்பா எழுதுவது பற்றி நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கையில், வலையில் "வெண்பா வடிக்கலாம் வா" என்கிற ஒரு குழுமம் உருவாக்கப்பட்டு, வெகு நாட்களாக நான் தொடர்பில்லில்லாத என்னுடைய "தென்றல்" துவக்ககால நண்பர் திரு. வாஞ்சிநாதனை நினைவு கூர்ந்து, வலையில் தேடும்போது வாஞ்சியைக் காணவில்லை; ஆனால் வாஞ்சையுடன் என்னை எண்பத்தைந்தாம் வருடம் டொராண்டோ நகரில் ஒருநாளை பகிர்ந்துகொண்ட மதிப்பிற்குறிய மின்னணுவியல் துறை பேராசிரியர் பசுபதி தானுமுவந்து பகிர்ந்துகொண்ட கவிதை இதோ...! கவிமாமணி இளையவன்.. அவர் தமிழே இனிமை, இளமை – யாருக்கும் இளைக்காத புலமை! நீங்களும் ரசிக்கலாமே!]



தந்திரப் பேச்சு -- கவிமாமணி இளையவன்


போஜன் என்பவன் ஒர்அரசன்
புலவர் போற்றும் பேரரசன்
பூஜை எல்லாம் சிவன்மேலே
பொழுதும் நினைவு அவர்மேலே

ஏழை ஒருவன் "சிவபெருமான்"
எங்கும் இல்லை" எனச்சொன்னான்
வாழை மரபாய்க் கொடைத்தன்மை
வாய்ந்தோன் போஜன் இதைக்கேட்டான்

"சிவனை இல்லை என்கின்றாய்,
சொல்வது எப்படி" எனக்கேட்டான்
அவனோர் ஏழை ஆனாலும்
அறிவின் திறனால் விடைசொன்னான்

சங்கர நாரா யணன்எனவே
சங்குத் திருமா லிடம்பாதி
அங்கம் தந்தார் மீதியினை
அன்பாய்ச் சக்திக் களித்திட்டார்

இரண்டு பாதி போனதனால்
இனிமேல் சிவனார் "ஏ'தென்றான்
அருமை விளக்கம் எனப்போற்றி
அரசன் கேள்வி சிலகேட்டான்.

சந்திர கலையது எங்கென்றான்
சந்தி ரனிடமே போச்சென்றான்
விந்தை! கங்கை எங்கு' என
"வந்தே சங்கம் இங்" கென்றான்

சிவனின் வீரம் எங்கென்றான்
சேர்ந்தது உங்களை எனச்சொன்னான்
தவழும் திருவோ டெங்கென்றான்
தனதே அதுவென விடைசொன்னான்

ஏழையின் கையில் திருவோடு;
ஏந்தல் பார்த்தான் கனிவோடு
வாழும் தந்திரப் பேச்சுக்கு
வரிசை அளித்தான் மகிழ்வோடு !

ஜனவரி 16, 2012

இயற்கை


[இன்று ஒரு கவிதை.. "தானே" புயலுக்குப் பிறகு நடக்கும் அரசியலைப் பற்றி ஒரு செய்தியைப் படித்தேன். அதன் பாதிப்பில் எழுத தொடங்கிய கவிதை அனுமன் வால் போல் நீண்டு கொண்டே போக, வழக்கம் போல் பொசுக்கென்று முடித்துவிட்டேன்.. இன்னும் எழுதிப் பழக வேண்டும்! ]

cy_295_3.jpg


ஆறறிவு மனிதர்களின் ஆரவாரப் போலித்தனம்
ஓரறிவு மில்லாத இயற்கையிலே இருக்கவில்லை

மனிதசக்தி அறியவொண்ணா மாசக்தி ஐந்தனிலும்
கனிவுமுண்டு கடுஞ்சீற்றக் கூற்றாகிக் காய்வதுண்டு!

ஆனாலும் அங்கேயோர் மதமென்ற பேதமுண்டோ?
வீணாக இனமென்றும் மொழியென்றும் கூச்சலுண்டா?

நிலமதிர்வும் கடற்கோளும் பேய்க்காற்றுப் பெரும்புயலும்
நீர்மலிந்து பெருவெள்ளக் காடாகும் நிலையதுவும்,
தீயெழுந்து எரிமலையாய் கொதிகுழம்பாய்ச் பொழிவதுவும்,
வேர்பிடுங்கி எறிந்திவரை அடியோடு அழித்திடுவோம்,
மாயட்டும் மாற்றுசாதி - வாழட்டும் நம்சாதி
என்கின்ற வன்மத்தின் வெளியீடாய் இருப்பதில்லை!

கன்மத்தின் குறியீடாய் கதைசொல்வர் ஒருமதத்தார்!
இயற்கைதரும் ஜிக்ஹாதி எனமுழங்கும் ஒருமதத்தார்!
மயக்கமின்றி தெளிவீரே தீர்ப்பிடுநாள் வெகுவிரைவில்
மீட்பரிங்கு வரவேண்டி பாவிகளே மாறிடுவீர்!
தயக்கமின்றி தெரிவிப்பார் தேவதூதன் கட்சியினர்

கேட்பவர்கள் கேட்கநெய்யும் கேப்பையிலே வடியுதென்பார்.
முயற்சியின்றி முயங்கிமூலை முடங்கிமக்கள் இருப்பரென்றால்
தடியெடுக்கும் தண்டல்காரர் படியளக்கும் பகவனாவார்
படிந்தால்பார் இல்லையெனில் பரலோகம் உனக்கிருக்கு!

அரசின்வழி அறவின்வழி என்றகாலம் கடந்தகாலம்!
அரவின்வழி, அடக்குமுறை, எதிர்த்தாலே அழிக்கும்வழி!
உறவின்வழி பிழைக்கின்ற ஊரேய்க்கும் பிழைகள்பல
சிறப்பாக சீரழிக்கும் சிங்காரம் இக்காலம்.

ஆயிரமாய் ஜாதியிங்கு இருந்தாலும் அன்னியர்கள்
புகுவதென்ன நீதியென்ற பாரதியும், நம்மவரே
தாயனைய தேசமிதை துகிலுரியும் துச்சர்களாய்
மிகுநீச மோசர்களாய் போவரென அறிந்திருந்தால்
வெதும்பித்தான் மாய்ந்திருப்பான் வெற்றாக போனதென்று!
இதுஎன்னால் பொறுப்பதில்லை வெந்தீயில் தீயட்டும்
எழுதியவென் வலக்கையும் உலக்கையென ஆகட்டும்
பழுதுபட்ட சமுதாயம் பாழாகப் போகட்டும்
என்றல்லோ மனம்வெறுத்து சலித்திருப்பான்? சபித்திருப்பான்?
அன்றேதன் தமிழாலே "அறம்"பாடி அழித்திருப்பான்.

மதத்தாலும் மொழியாலும் நிலத்தாலும் நீராலும்
உதவாத பலவாத பிடிவாத மடமைகளால்
விடமாக வளர்ந்திருக்கும் பிளவாக்கும் மனப்போக்கும்
முடமாகி உயிர்ப்பின்றி ஜடமான நிலையதுவும்
மாறிநம்மில் புதுநோக்கும் புத்துணர்வும் பிறந்திடவே
சீறியதாய் புதுவாழ்வு மலர்ந்திடவே இயற்கையெனும்
தாயவளின் வீரியமே பிரளயமதாய் பொங்கட்டும்!
நேயமுடன் மீண்டுமனிதம் புனிதமுடன் மலரட்டும்!

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...