டிசம்பர் 31, 2016

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 1

[மந்தஸ்மித சதகம் பொதுவாக இறுதிச் சதகமாகக் கொள்ளப்பட்டாலும், கணேசய்யர் பாஷ்யமும், அதையொட்டிய இராதகிருஷ்ண சாஸ்திரிகளின் உரை நூலும், செய்துள்ள வரிசைக் கிரமத்திலேயே அடியேனும் இத் தமிழ் கவிவுரையைச் செய்துள்ளேன்]

मन्दस्मितशतकम्

बध्नीमो वयमञ्जलिं प्रतिदिनं बन्धच्छिदे देहिनां
कन्दर्पागमतन्त्रमूलगुरवे कल्याणकेलीभुवे
कामाक्ष्या घनसारपुञ्जरजसे कामद्रुहश्चक्षुषां
मन्दारस्तबकप्रभामदमुषे मन्दस्मितज्योतिषे १॥

மந்த³ஸ்மிதஶதகம்

³த்னீமோ வயமஞ்ஜலிம் ப்ரதிதி³னம் ³ந்தச்சி²தே³ தே³ஹிநாம்
கந்த³ர்பாக³ம தந்த்ரமூல கு³ரவே கல்யாண கேலீபுவே
காமாக்ஷ்யா னஸார புஞ்ஜரஜஸே காம த்³ருஹஶ்சக்ஷுஷாம்
மந்தா³ர ஸ்தப³க ப்ரபாமத³ முஷே மந்த³ஸ்மித ஜ்யோதிஷே 1

உயிர்க்கெலாம் பவத்தொடர்பறுப்பதும், மன்மத சாத்திரத்தின் முதற்குருவும், மங்கள விளையாடல்களின் இருப்பிடமும், காமவைரியாம் சிவனுக்கு பச்சைக் கற்பூரத்தூள்போல் குளிர்ச்சியைத் தருவதும், மந்தாரப் பூங்கொத்தின் ஒளியினுடைய அகந்தையை அடக்குவதுமான காமாக்ஷியின் மென்சிரிப்பின் ஒளிக்கு தினமும் நாம் இருகைகளைக் கூப்பிடுவோம்.

பாரி லுயிர்க்குப் பவபந் தமழிக்கும் பஞ்சபாண
ஆரணத் தின்முதல் அத்தனும், மங்கல ஆட்டுறைவும்
மாரயா ரிக்கு மழைப்பூரத் தூளாம்கா மாட்சியின்மந்
தாரம்தாழ் செய்மந் தநகைக்கு நம்மஞ் சலிதினமே!


பவபந்தம்-பவத்தொடக்கை; பஞ்சபாண ஆரணம்-காம சாத்திரம்; அத்தன்-குரு; ஆட்டுறைவு-விளையாடல்களின் இருப்பிடம்; மார யாரி- மன்மத வைரி (சிவன்);  மழை-குளிர்ச்சி; பூரத்தூள்-பச்சைக் கற்பூரத்தூள்; தாழ்செய்-அகந்தையடக்கும்; மந்தநகை-மென்னகை; அஞ்சலி-கைகூப்பித் தொழல்!

டிசம்பர் 30, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 103

इदं यः कामाक्ष्याश्चरण नलिन स्तोत्र शतकं
जपेन्नित्यं भक्त्या निखिल जगदाह्लाद जनकम्
विश्वेषां वन्द्यः सकल कवि लोकैक तिलकः
चिरं भुक्त्वा भोगान्परिणमति चिद्रूप कलया १०३॥

पादारविन्दशतकं सम्पूर्णम्

இத³ம் ய: காமாக்ஷ்யா: சரண நலின ஸ்தோத்ர தகம்
ஜபேன்னித்யம் பக்த்யா நிகி²ல ஜக³தா³ஹ்லாத³ ஜனகம்
ஸ வி்வேஷாம் வந்த்³ய: ஸகல கவி லோகைக திலக:
சிரம் புக்த்வா போகா³ன் பரிணமதி சித்³ ரூப கலயா 103

பாதா³ரவிந்த³தகம் ஸம்பூர்ணம்

அனைத்து உலகங்களுக்கும் ஆனந்தத்தை தரும் காமாக்ஷியின் திருவடித் தாமரைகளைப் பற்றிய, இந்த நூறு துதிகளை எவனொருவன் பக்தியோடு எப்போதும் படிக்கிறானோ, அவன் உலகே வந்திக்கப்படுவனாகவும், அனைத்து கவியுலகிற்கும் திலகமாகவுமாகி, அனைத்துச் சுகங்களையும், வெகுகாலம் பெற்று, சித்துருவாகவே ஆகிறான்.

பாதாரவிந்த சதகப் பாராயணப் பயன்:

அனைத்து லகினுக்கும் ஆனந்த, காமாட்சீ அன்னைசரண்
தனைப்பாடும் நூறாம் சரணங்கள், பக்தியில் தாம்படிப்போர்க்
கனைத்துல கும்வந்திக் கக்கவி கட்சுடி கையுமாகி
அனைத்து சுகமும் அடைந்துசித் தாகவே ஆவரன்றே!

சுடிகை-திலகம்


பாதரவிந்த சதகம் (நூறு) இத்துடன் முடிவுற்றது.

டிசம்பர் 29, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 102

पदद्वन्द्वं मन्दं गतिषु निवसन्तं हृदि सतां
गिरामन्ते भ्रान्तं कृतकरहितानां परिबृढे
जनानामानन्दं जननि जनयन्तं प्रणमतां
त्वदीयं कामाक्षि प्रतिदिनमहं नौमि विमलम् १०२॥

பத³ த்³வந்த்³வம் மந்த³ம் க³திஷு நிவஸந்தம் ஹ்ருʼதி³ ஸதாம்
கி³ராமந்தே ப்ராந்தம் க்ருʼதக ரஹிதாநாம் பரிப்³ருʼடே
ஜனாநாமானந்த³ம் ஜனனி ஜனயந்தம் ப்ரணமதாம்
த்வதீ³யம் காமாக்ஷி ப்ரதிதி³னமஹம் நௌமி விமலம் 102

மிகச் சிறந்தவளே! காமாக்ஷி அன்னையே! மென்னடை உடையவையும், நல்லவர் உள்ளங்களில் வசிப்பவையும், யாராலும் செய்யப்படாத வேத முடிவில் உலவுபவையும். வணங்கும் மனிதருக்கு மகிழ்ச்சியைப் பிறப்பிப்பவையும், அழுக்கற்ற தூயவையுமான உன்னிரு திருவடிகளை தினமும் வணங்குகிறேன்.

மென்னடை மிக்கு, மிகநல்லோர் உள்ளத்து வீற்றிருக்கும்,
தன்மத்தின் அந்தமாய் தங்கும், துதிப்போர் தமக்குமகிழ்
வென்றும் சனிக்கும் விமலநின் பாதயீர் வீழ்ந்துமேயான்
அன்னையே காமாட்சீ ஆகச் சிறந்தாளே! ஆற்றுவனே!


தன்மம்-வேதம்; அந்தம்-முடிவு (தன்ம அந்தம்-உபநிடதம்); சனிக்கும்-பிறப்பிக்கும்; விமல-அழுக்கற்ற; ஆக-மிக;

டிசம்பர் 28, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 101

पुरा मारारातिः पुरमजयदम्ब स्तवशतैः
प्रसन्नायां सत्यां[1] त्वयि तुहिनशैलेन्द्रतनये
अतस्ते [2] कामाक्षि स्फुरतु तरसा कालसमये
समायाते मातर्मम मनसि पादाब्जयुगलम् १०१॥

புரா மாராராதி: புரமஜயத³ம்ப³ ஸ்தவதை:
ப்ரஸன்னாயாம் ஸத்யாம்1 த்வயி துஹின ைலேந்த்³ர தனயே
அதஸ்தே2 காமாக்ஷி ஸ்பு²ரது தரஸா கால ஸமயே
ஸமாயாதே மாதர்மம மனஸி பாதா³ப்³ஜ யுக³லம் 101

மலையரசன் மகளே காமாக்ஷீ! தாயே! பண்டு எப்பாதங்களைப் பற்றிய நூற்றுக்கணக்கான துதிகளால் நீ மகிழ்ந்ததால், மன்மதனை எரித்த சிவனார் முப்புரங்களையும் வென்றாரோ, சிறந்த அவ்விரு தாமரையன்ன பாதங்களும் காலன் வருங்காலத்தில் என்மனதில் நன்றாக ஒளிரட்டும்

பண்டெந்தப் பாதங்கள் பற்றிநூற் றாய்துதி பாடிடநீ
கண்ட மகிழ்வால் கனலுண முப்புரம் காமவைரி
கொண்டாரோ அவ்விரு கூர்கயப் பாதமும் கூற்றுறுங்கால்
அண்ட மலைமகள் அன்னைகா மாட்சீ அருளொளிர்ந்தே!

பண்டு-முன்பொருகாலம்; கனலுண-எரியுண்ண; காமவைரி-சிவனார்; கூர்-சிறந்த; கயம்-தாமரை; கூற்று-எமன்;

நூற்றூக்கணக்கில் துதிபாடியதால் சிவபெருமானே திரிபுரம் எரிக்கும் திறனுற்றதுபோல், யானும் நூறுபாடல்களால் உன்பாதங்களைத் துதித்துள்ளேன்; காலன் வருங்காலத்தில் என்னுள்ளத்தில் நீயே ஒளிர்ந்திருப்பாயாக என்று வேண்டுகிறார் மூகர்.


[1] यस्य​;  யஸ்ய
[2] परं तत्  ; பரம் தத் என்றும் பாடம் உண்டு 

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...