டிசம்பர் 29, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 102

पदद्वन्द्वं मन्दं गतिषु निवसन्तं हृदि सतां
गिरामन्ते भ्रान्तं कृतकरहितानां परिबृढे
जनानामानन्दं जननि जनयन्तं प्रणमतां
त्वदीयं कामाक्षि प्रतिदिनमहं नौमि विमलम् १०२॥

பத³ த்³வந்த்³வம் மந்த³ம் க³திஷு நிவஸந்தம் ஹ்ருʼதி³ ஸதாம்
கி³ராமந்தே ப்ராந்தம் க்ருʼதக ரஹிதாநாம் பரிப்³ருʼடே
ஜனாநாமானந்த³ம் ஜனனி ஜனயந்தம் ப்ரணமதாம்
த்வதீ³யம் காமாக்ஷி ப்ரதிதி³னமஹம் நௌமி விமலம் 102

மிகச் சிறந்தவளே! காமாக்ஷி அன்னையே! மென்னடை உடையவையும், நல்லவர் உள்ளங்களில் வசிப்பவையும், யாராலும் செய்யப்படாத வேத முடிவில் உலவுபவையும். வணங்கும் மனிதருக்கு மகிழ்ச்சியைப் பிறப்பிப்பவையும், அழுக்கற்ற தூயவையுமான உன்னிரு திருவடிகளை தினமும் வணங்குகிறேன்.

மென்னடை மிக்கு, மிகநல்லோர் உள்ளத்து வீற்றிருக்கும்,
தன்மத்தின் அந்தமாய் தங்கும், துதிப்போர் தமக்குமகிழ்
வென்றும் சனிக்கும் விமலநின் பாதயீர் வீழ்ந்துமேயான்
அன்னையே காமாட்சீ ஆகச் சிறந்தாளே! ஆற்றுவனே!


தன்மம்-வேதம்; அந்தம்-முடிவு (தன்ம அந்தம்-உபநிடதம்); சனிக்கும்-பிறப்பிக்கும்; விமல-அழுக்கற்ற; ஆக-மிக;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...