டிசம்பர் 31, 2015

தெய்வத்தின் குரல் இங்கே கேட்குது

இராகம்: நீலமணி - தாளம்: ஆதி

பல்லவி:
தெய்வத்தின் குரல் இங்கே கேட்குது - அருள்
செய்கின்ற பார்வையொன்றும் பார்க்குது - தினமும் (தெய்வத்தின்)
அனுபல்லவி:
வையமெல்லாம் வியக்கும் மெய்யவதாரமாய்
பெயும்கருணை மழையாய் பொழிந்தருளைச் சொரியும் (தெய்வத்தின்)
சரணம்:
கைகளில் தண்டமும் கண்களில் கனிவும் - அத்
வைதநெறி காட்டும் அருளென வாக்கும்
வெய்யிலாம் வாழ்விலே தருவென நிழலும் - உயர்
மெய்ஞான போதமும் மோதமும் தருமந்த

ஷோடஸ கணபதி 10 - கணாத்யக்ஷன் ((சிவ)கணங்களின் நாயகன்)

கணாத்யக்ஷன் ((சிவ)கணங்களின் நாயகன்)

தூமகேதுர்-கணாத்யக்ஷ: ஷோடச நாமங்களில் தூமகேதுவுக்கு அப்புறம் 'கணாத்யக்ஷர்'கண-அத்யக்ஷர். அத்யக்ஷர் என்றால் ஸூபர்வைஸ் பண்ணுகிறவர். தலைவர். (தலையை வைத்தேதான் வெள்ளைக்காரர்களும் Head of the Government, Head Priest என்றெல்லாம் சொல்கிறார்கள்!) ஸமீபகாலம் வரை வைஸ் சான்ஸ்லர்களை உப- அத்யக்ஷர் என்றே சொல்லி வந்தோம்.

கண-பதி, கணேசர் (கண-ஈசர்) , கணாதிபதி (கண-அதிபதி) , கணநாதர் என்றெல்லாம் சொன்னால் என்ன அர்த்தமோ அதுதான் கணாத்யக்ஷர் என்பதற்கும் அர்த்தம்.

பரமேச்வரன் தம்முடைய பூதகணங்களுக்கு அதிபதியாக விக்நேச்வரரையும், தேவகணங்களுக்கு அதிபதியாக இளைய பிள்ளை ஸுப்ரஹ்மண்யரையும் வைத்தார். 'கஜாநநம், பூதகணாதி ஸேவிதம்' என்கிறோம். இளைய பிள்ளையை தேவஸேநாதிபதி என்கிறோம். அவர் இரண்டு விதத்தில் அப்படி இருக்கிறார். தேவர்களின் ஸேனைக்கு அதிபதி;தேவேந்திரனின் குமாரியான தேவஸேனைக்குப் பதி!தேவர்களுக்கு ஆதிபத்யம் தாங்குவதைவிட, பூதங்களைக் கட்டி மேய்த்து அடக்கியாளுவதுதான் கஷ்டம். மூத்தபிள்ளை இந்தக் கஷ்டமான பொறுப்பை 'ஈஸி'யாக ஆற்றிக் கொண்டு ஆனந்தமாயிருக்கிறார்.

தேவ கணம், மநுஷ்ய கணம் ஆகியவையும் அவருடைய மஹாசக்தியையும், அருள் உள்ளத்தையும் தெரிந்து கொண்டு அவருக்கு அடங்கி பூஜை பண்ணத்தான் செய்கின்றன. ஆனபடியால் அவர் கணாத்யக்ஷர் என்கிற போது ஸகலவிதமான ஜீவகணங்களுக்குமே அத்யக்ஷர் என்று சொல்லலாம்.

ஷோடஸ கணபதி 10 - கணாத்யக்ஷன் ((சிவ)கணங்களின் நாயகன்)

கணநா தனைநுதற் கண்ணன் புதல்வன் கணபதியை
கணமும் மறவீர் கருத்தில் இருத்துவீர் காத்திடுவான்
தணலென துன்பமும் தாங்கத் துணையாய் தயைபுரிவான்
வணங்க வளமுடன் வாழ்வும் வழங்கிடும் வாரணனே


kaṇanā taṉainutaṟ kaṇṇaṉ putalvaṉ kaṇapatiyai
kaṇamum maṟavīr karuttil iruttuvīr kāttiuvā
taṇaleṉa tuṉpamum tāṅkat tuṇaiyāy tayaipurivā

vaṇaṅka vaḷamuṭaṉḻvum vaḻaṅkiṭum vāraṇaṉē

டிசம்பர் 30, 2015

ஷோடஸ கணபதி 9 - தூமகேது (கொடிப்புகையோன்)

“தூமகேது” என்னும் நாமத்தைப் பற்றி மஹாஸ்வாமிகளின் வாக்கிலிருந்து:

தூமகேது என்பது அடுத்த நாமா. தூமம் என்றால் புகை. சாதாரண விறகுப் புகை, கரிப் புகையை தூமம் என்றும் நல்ல ஸுகந்தம் வீசும் சாம்பிராணி, அகில் முதலியவற்றின் புகையை தூபம் என்றும் சொல்ல வேண்டும் என்பார்கள். பஞ்சோபசாரத்தில் தூபம் காட்டுகிறோம். தூமம். புகை. கேது என்றால் கொடி. புகையைக் கொடியாக உடையவர் தூமகேது. நெருப்பிலிருந்து புகை எழும்பிக் காற்றில் கொடி படபடவென்று அடித்துக் கொள்வதுபோலப் பரவுவதால் அக்னி பகவானுக்கு தூமகேது என்று பேர் இருக்கிறது. ஆனால் பொதுவில் தூமகேது என்றால் நல்ல அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளாமல் உத்பாதகாரகமாகவே (உற்பாதம் விளைவிப்பதாகவே) எடுத்துக் கொள்கிறோம். காரணம் தூமகேது என்றால் வால் நக்ஷத்ரம் என்றும் அர்த்தம் இருப்பதுதான். வால் நக்ஷத்திரம் லோகத்துக்கு அமங்கலத்தைக் குறிப்பது. லோக மங்கள மூர்த்தியான பிள்ளையாருக்கு அப்படிப் பேர் இருப்பானேன் என்று புரியாமலிருக்கிறது.

விநாயக புராணத்தைப் பார்த்தேன். விநாயகரைப் பற்றி இரண்டு புராணங்கள் இருக்கின்றன. ஒன்று ப்ருகு முனிவர் சொன்னது. அதனால் அதற்கு பார்கவ புராணம் என்று பேர். 'ரகு'ஸம்பந்தமானது 'ராகவ'என்பதுபோல ப்ருகு ஸம்பந்தமானது பார்கவ. முத்கலர் என்ற ரிஷி உபதேசித்ததால் முத்கல புராணம் எனப்படும் இன்னொரு விநாயக புராணமும் இருக்கிறது. ப்ருகு - பார்கவ என்கிற ரீதியில் முத்கலர் ஸம்பந்தமானது மௌத்கல்ய. ஆனாலும் அப்படிச் சொல்லாமல் முத்கல புராணம் என்றே சொல்கிறார்கள். நான் இப்போது தூமகேது விஷயமாகக் குறிப்பிட்டது பார்கவ புராணத்தை.

அதில் உபாஸனா காண்டம். லீலா காண்டம் என்று இரண்டு பாகம். லீலா காண்டத்தில் ரொம்பவும் ஆச்சர்யமாக விக்நேச்வரருக்குப் பன்னிரண்டு அவதாரங்களைச் சொல்லி, ஒவ்வொன்றுக்கும் ஒரு பேர் கொடுத்திருக்கிறது. அதன்படி கணேசர் என்பது ஒரு அவதாரம்.

கணபதி என்பது இன்னொரு அவதாரம். ஷோடச நாமாவில் வரும் வக்ரதுண்டர், பாலசந்திரர், கஜாகர்னனர் என்பவை அதிலே வெவ்வேறு அவதாரங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் பெயர்கள். அவற்றில் தூமகேது என்ற அவதாரத்தைப் பற்றிய கதையும் இருக்கிறது. அதைப் பார்த்தபின்தான் இந்தப் பேர் அவருக்கு ஏன் ஏற்பட்டது என்று புரிந்தது.

கதை என்னவென்றால்..... ரொம்ப நாளுக்கு முந்திப் பார்த்தது, நினைவு இருக்கிற மட்டில் சுருக்கமாகச் சொல்கிறேன். சுருக்கமாகச் சொன்னால்தான் ரொம்பத் தப்புப் பண்ணாமல் தப்பிக்க முடியும்.

தூமாஸுரன் என்று ஒருத்தன். பாகவதத்தில் வரும் வ்ருத்ராஸுரன், மஹாபலி மாதிரி சில அஸுரர்களிடம் மிக உத்தமமான குணங்களும் பக்தியும் இருக்கும். ஆனாலும் அஸுரப் போக்கும் தலை தூக்கிக் கொண்டுதானிருக்கும். அப்படி ஒருத்தன் இந்த தூமாஸுரன். அப்போது ஒரு ராஜா இருந்தான். கர்பிணியாயிருந்த அவனுடைய பத்னிக்கு மஹாவிஷ்ணுவின் அம்சமாகப் புத்ரன் பிறந்து அந்தப் பிள்ளையினாலேயே தனக்கு மரணம் என்று தூமாஸுரனுக்கு தெரிந்தது. உடனே அவன் தன் ஸேநாதிபதியை அழைத்து நல்ல ராவேளையில் அந்த ராஜாவின் சயனக்ருஹத்திற்குப் போய் ராஜ பத்னியைத் தீர்த்துக்கட்டிவிட்டு வரும்படி சொல்லியனுப்பினான். ஆனால், அங்கே போன ஸேநாதிபதிக்கு ஒரு உத்தம ஸ்த்ரீயை, அதுவும் கர்ப்பிணியாக இருப்பவளைக் கொல்ல விருப்பமில்லை. அந்த தம்பதியைப் பிரிக்கவும் மனஸ் வரவில்லை. ஆனபடியால் அவன் ஸதிபதிகளாகவே அவர்களைக் கட்டிலோடு தூக்கிக்கொண்டுபோய் ஒரு காட்டு மத்தியில் போட்டுவிட்டான். அங்கே விநாயக பக்தர்களான அந்த இரண்டு பேரும் ஸதா அவரை த்யானித்துக்கொண்டு அவரால்தான் கஷ்டங்கள் தீர்ந்து நல்லபடியாக ப்ரஸவமாகி ராஜ்யத்திற்குத் திரும்ப வேண்டும் என்று ப்ரார்த்தித்து வந்தார்கள்.

அவர்கள் வனாந்தரத்தில் தலைமறைவாக இருக்கிறார்களென்று தூமாஸுரனுக்குத் தெரிந்தது. உடனே அவனே அஸ்த்ரபாணியாக அங்கே போனான். அவன் ஸ்பெஷலைஸ் பண்ணியிருந்த அஸ்த்ரம் என்னவென்றால், அவன் பேர் என்ன?தூமாஸுரன்தானே?தூமம் என்றால் புகைதானே?அவன் ஒரு விஷப்புகையாகக் கக்குகிற அஸ்திரத்தைப் போடும் வித்தையிலேயே கைத்தேர்ந்தவனாக இருந்தான்.

இந்த நாளும் கண்ணீர்ப்புகை என்கிற ஆபத்தில்லாத tear gas -லிருந்து gas shell என்ற ப்ராணா-பத்தான விஷவாயுக் குண்டுகள் வரை இருக்கிறதல்லவா?இப்போது கெமிக்கல்ஸை வைத்துப் பண்ணுவதை அப்போது மந்த்ர சக்தியால் பண்ணியிருக்கிறார்கள்.

தூமாஸ்திரத்தால் கர்ப்பிணியை அவள் வயிற்றிலிருக்கும் சிசுவோடும், பக்கத்திலிருக்கும் பதியோடும் சேர்த்து ஹதம் பண்ணிவிட வேண்டுமென்கிற உத்தேசத்துடன் அவர் போய்ப் பார்த்தால், அப்போதே அவள் மடியில் குழந்தை இருந்தது. பிள்ளையார்தான் அந்த தம்பதியின் ஸதாகால ப்ரார்த்தனைக்கு இரங்கி வைஷ்ணவாம்சமான புத்ர ஸ்தானத்தில் தோன்றிவிட்டார். இதனால் தாம் ஸர்வதேவ ஸ்வரூபி என்று காட்டிவிட்டார். சிவகுமாரராகப்பட்டவர் விஷ்ணு அம்ஸமாகப் பிறந்தார் என்பதில் சைவ வைஷ்ணவ ஸமரஸமும் உசத்தியாக வந்துவிடுகிறது. சுக்லாம்பரதரம் விஷ்ணும் என்று ஆரம்ப ச்லோகத்திலேயே வருகிறதே!

தூமாஸுரன் சரமாரியாக தூமாஸ்திரம் விட, சீறிக் கொண்டு பெரிய பெரிய மேகம் மாதிரிப் புகை அவர்களை நோக்கிப் பாய்ந்தது. அத்தனையையும் குழந்தைப் பிள்ளையார் தன்னுடைய சரீரத்துக்குள்ளேயே வாங்கிக் கொண்டு விட்டார். இனிமேல் அஸ்த்ரம் போட முடியாதென்று அஸுரன் களைத்துப்போய் நின்று நிட்டான். அப்போது, அவனை ஸம்ஹாரம் பண்ணுவதற்கு பிள்ளையார் தீர்மானித்தார். அதற்காக நாம் புதுஸாக அஸ்த்ரம் எதுவும் போடவேண்டாம். அவனே போட்டு நாம் உள்ளே வாங்கு வைத்துக் கொண்டிருக்கும் விஷப்புகையாலேயே கார்யத்தை முடித்து விடலாம் என்று நினைத்தார். உடனே உள்ளே ரொப்பிக் கொண்டிருந்த அத்தனை தூமத்தையும் குபுக் குபுக் என்று வாயால் கக்கினார். அதுபோய் துமாஸுரனைத் தாக்கி அழித்துவிட்டது.

தூமத்தை அஸ்திரமாகக் கொண்டே வெற்றிக்கொடி நாட்டிக்கொண்ட பிள்ளையாருக்கு தூமகேது என்ற நாமா உண்டாயிற்று. தூமம் என்பதை தூம்ரம் என்றும் சொல்வதுண்டு. தூமகேதுவையும் தூம்ரகேது என்பதுண்டு.

ஷோடஸ கணபதி 9 - தூமகேது (கொடிப்புகையோன்)

தூம அசுரனாம் துட்டனைச் செற்றவர் தூமகேது
ஏமம் தருவார் இபமுகர் என்றும் இதமளிப்பார்
நேமத் தொடுநிதம் நெஞ்சில் இருத்தி நினைபவர்க்கு
தூமம் இலாமல் துலக்கியே தீபமாய் தூண்டுவனே

tammiṉum mēlām talaivail nātaār taṇṇaḷikkum
pemmā vināyakar pēṟeṉak kuṉṟāp perumaiyuṭaṉ
immaiyum eppōtum īntē uḷattil iruntiṭuvā

ammaiyum appaṉum aṇṭa meṉavōtum āṇṭavaṉē

டிசம்பர் 29, 2015

ஷோடஸ கணபதி 8 - விநாயகன் (மேலாம் தலைவனிலான்)

காஞ்சிமஹா ஸ்வாமிகளின் வாக்கில் “விநாயகரைப்” பற்றி

விநாயகர் ; இரட்டைப் பிள்ளையார்.

விக்நராஜோ விநாயக:- விக்நராஜர் என்ற பேருக்கு அடுத்தபடி விநாயகர் என்று வருகிறது. இரட்டைப் பிள்ளையார் எனறு பக்கத்தில் பக்கத்தில் இரண்டு பிள்ளையார்களைப் பிரதிஷ்டை செய்கிற வழக்கம் இருக்கிறது. அநேக ஊர்களில் இரட்டைப் பிள்ளையார் கோயில் தெரு என்று இருக்கும். அங்கே ஒரே ஆலயத்தில் ஒரே சந்நிதியில் இரண்டு பிள்ளையார்கள் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பபார்கள். தனிக் கோவிலாக இல்லாமல் ஈச்வரன் கோவிலிலேயே இரட்டைப் பிள்ளையார் இருப்பதுமுண்டு.

வேறே எந்த ஸ்வாமிக்கும் இப்படி ஜோதி மூர்த்திகள் வைத்து ஆராதிப்பதாகக் காணோம். பிள்ளையாருக்கு மட்டும் இருக்கிறது. இரட்டைப் பிள்ளையார் என்றே சொல்வதாகவுமிருக்கிறது.

ஏனிப்படி என்றால் இவர் ஒருத்தர்தான் தாமே ஒன்றுக்கொன்று எதிரானதாகத் தோன்றும் இரண்டு காரியங்களைப் பண்ணுகிறார். எதிரானது என்று சொல்லவில்லை. எதிரானதாகத் தோன்றுகிற என்கிறேன். இதற்கு அப்புறம் வருகிறேன். ஆகக்கூடி இவர் செய்கிற இரண்டு கார்யங்களில் ஒன்று மற்றதற்கு நேர் மாதிரித் தெரிகிறது. அவற்றில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மூர்த்தியாகத் தான் இரட்டைப் பிள்ளையார் என்று வைத்திருப்பது.

அந்த இரண்டு மூர்த்திகளில்தான் ஒருத்தர் விக்நராஜர். மற்றவர் விநாயகர். அடுத்தடுத்து இரண்டு பிள்ளையார் மூர்த்திகள் உட்கார்ந்திருக்கிறார்ப்போலவே இந்தப் பேர்களும் (ஷோடச நாமாவளியில்) அடுத்தடுத்து வருகின்றன. விக்நராஜா விநாயக.

அதென்ன இரண்டு கார்யமென்றால் - ஒன்று விக்னங்களை உண்டு பண்ணுவது. மற்றொன்று விக்னங்களைப் போக்குவது. நேர்மாறாகத் தோன்றும் இரண்டு கார்யங்கள்.

விக்நேச்வரர், விக்நராஜர் என்றெல்லாம் சொல்லும்போது விக்னத்தை உண்டாக்குவதில் ஈச்வரர், ராஜா என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக்கூடாது. ஈச்வரனே, ராஜாவோ எப்பதி கெட்டதை அடக்கி அழிக்கும் சக்தியோடு இருக்கிறார்களோ அப்படி இவர் விக்னம் என்ற கெட்டதை அழிப்பதாலேயே இப்படி பேர் பெற்றிருக்கிறாரென்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று சொன்னேன். பொதுவாக விக்நேச்வரர் என்று அவரைச் சொல்லி வணங்கும்போது இந்த அர்த்தத்தில், பாவத்தில்தான் செய்ய வேண்டும்.

ஆனால் இரட்டைப் பிள்ளையார்களில் முதல்வராக அவர் விக்நராஜரைப் பேரில் இருக்கும்போது அவரை விக்னங்களை உண்டாக்குபவர் என்றுதான் வைத்துக் கொள்ள வேண்டும். வார்த்தையின் நேர் அர்த்தப்படி, (சிரித்து) திருட்டுப் பண்ணுவதில் மஹா கெட்டிக்காரனாக இருப்பவனைத் திருட்டு ராஜா என்கிற மாதிரி, விக்னங்களைப் பண்ணுவதில் மஹா கெட்டிக்காரர் என்பதாலேயே விக்னராஜா என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்புறம் விக்னங்களைப் போக்கும் மூர்த்தியாக அவர் இருக்கும்போதுதான் அவருக்கு விநாயகர் என்று பெயர்.

விக்னங்களைப் பண்ணுகிறாரென்றால், பொல்லாத சாமியா?என்றால், அதுதானில்லை.
அதனால்தான் விக்னங்களைப் பண்ணுவதையும் போக்குவதையும் நிஜமாகவே எதிரெதிர் என்று சொல்லாமல் எதிர் மாதிரித் தோன்றுகிற என்று சொன்னது. இந்த இரண்டு காரியங்களுக்கும் ஸாரம் அநுக்ரஹம் என்ற ஒன்றேதான். அதுவே இரண்டு ரூபத்தில்விக்னம் பண்ணுவது, விக்னத்தை அழிப்பது எனறு இரண்டாயிருக்கிறது. அதனால் அடிப்படையில் எதிரெதிர் இல்லை.

விக்னத்தைப் பண்ணுவதா அநுக்ரஹம்?அதெப்படி என்றால்,

எத்தனையோ தப்புக் கர்மா பண்ணி நாமெல்லாம் நிறைய மூட்டை கட்டிக் கொண்டு வந்துள்ளோம். ஆனாலும் இப்போது ஏதோ கொஞ்சம் ஈச்வராநுக்ரஹத்தினால் கொஞ்சம் பிள்ளையார் பக்தி உண்டாகி, அவரை வேண்டிக்கொண்டு, நாம் ஆரம்பிக்கிற கார்யங்கள் விர்விக்னமாக நடக்க வேண்டும் என்பதற்காக அவரை வேண்டிக் கொண்டு ஆரம்பிக்கிறோம்.

சரி, இப்படி வேண்டிக்கொண்டோமென்பதற்காக நம் பழம் பாக்கியை அவர் அப்படியே ஒவர்லுக் பண்ணி நமக்குக் கார்ய ஸித்தியைத் தந்தால் ஸரியாயிருக்குமா? என்னதான் கருணையினால் விட்டுக் கொண்டுக்கலாமானாலும் ஒரேடியாக பூர்வ கர்ம பலனை கான்ஸல் பண்ணினால் ஸரியாயிருக்குமா?அப்புறம் பாபம் செய்யாத ஜனங்களுக்கு எப்படியிருக்கும்?தர்ம நியாயம் ஒன்றுமில்லை என்பதாகத்தானே ஆகிவிடும். நாம் என்ன வேணா பண்ணலாம், பண்ணியிருக்கலாம். இப்போ குஞ்சம் பிள்ளையார் பூஜை பண்ணிட்டா போறும். அத்தனை தப்பும் அடிபட்டுப் போயிடும் என்றல்லவா ஆகிவிடும்?

இப்படி ஆக விடாமலிருப்பதற்காகத்தான் அவர் விக்ந ராஜாவாக இருந்து விக்னங்களை உண்டு பண்ணுவது. உண்டு பண்ணுவது என்றால் அவராகவே நம்மைக் கஷ்டப்படுத்துவதற்காக அநியாயமாக உண்டு பண்ணுவதில்லை. நாம் பூர்வத்தில் பண்ணியிருப்பதின் பயனாக நமக்குக் கார்ய ஸித்தி ஏற்படுவதற்கில்லை என்று கர்ம நியாயக் கனக்குப் படியே இருக்கும். ஆகவே அவர் பண்ணுவதாகத் தோன்றும் விக்னத்திற்கு மூலம் பூர்வத்தில் நாம் பண்ணின தப்புதான். அது எப்படியும் நமக்கு அநேக கார்யங்கள் நிறைவேறாமல் இடைஞ்சல் பண்ணத்தான் இருக்கும். அது தானாகப் பண்ணினால் எத்தனையோ உத்பாதமாகவே இருக்கும். இடைஞ்சலால் கார்யம் அடியோடு கெட்டுத் தோற்றே போய் நிற்போம். அல்லது அனேக சின்னச் சின்ன விஷயங்களில் வெற்றி உண்டாக விட்டு (இடமளித்து) அப்புறம் சேர்த்து வைத்து அத்தனையும் நொறுக்கி மண்டையில் ஒரே போடாகப் போய்விடும் - படு தோல்வியே!இப்படி நேராமல், வெள்ளம் அப்படியே நம்மை அடித்துக் கொண்டு போய்விடாமல், வருமுன் காப்பாக அணைபோட்டுக் கொஞ்சங் கொஞ்சமாக ஜலத்தை விடுகிறாற்போலவே, விக்நராஜா நம்முடைய கர்ம சேஷத்தால் உண்டாக வேண்டிய இடைஞ்சலை நாம் தாங்கிக் கொள்கிற அளவில் சானலைஸ் பண்ணி விடுகிறார். சானலைஸ் பண்ணுவது மட்டுமில்லாமல் ஜலத்தையே ஒரளவுக்கு வற்றவும் பண்ணுகிறார். என்றைக்கோ பெரிஸாகப் பழிவாங்க இருக்கற பெரிய விக்னத்தை இப்போதே தன்னுடைய தும்பிச்சுக்கையால் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து, பாக்கியையும் ஒரே வீச்சில் காட்டி விடாமல், சின்னச் சின்னதாப் பண்ணி நாம் தாங்கிக் கொள்ளும்படிப் பண்ணுகிறார். பழைய கர்மா எவ்வளவு சீக்கிறம் தீர்கிறதோ அவ்வளவுக்கு நல்லதுதானே?அது தீர்ந்தால்தானே விமோசனத்துக்கு வழி திறக்கும்?தள்ளிப் போக போக நாம் இன்னமும் புதிஸாக எத்தனை மூட்டை சேர்த்துக்கொண்டு விடுவோமோ?இப்படி ஆகாமல் விக்னத்தை முன்னதாகவே இழுத்துக் கொண்டு வந்து, நமக்குக் கொடுமையானதாகத் தெரிந்தாலும் வாஸ்தவத்தில் பரம நல்லதே பண்ணுபவர்தான் விக்நராஜா.

விக்னத்தை இழுத்துக்கொண்டு வருபவர் விக்நராஜா. அப்புறம் அதைச் சிறிது பண்ணி, நாம் கொஞ்சம் அநுபவித்த உடனேயே, போதுமென்று அப்படியே போக்கி விடுபவர் விநாயகர். வியாதியைக் கிளறிவிட்டு ஸ்வஸ்தப்படுவதுண்டல்லவா?அப்படி, கிளறிவிடுபவர்தான் வித்நராஜர். ஸ்வஸ்தப்படுத்துகிறவர் விநாயகர்.

விக்ந கர்த்தா (இடையூறு செய்பவர்) விக்ந ஹர்த்தா (இடையூறை அழிப்பவர்) என்று இரண்டு பேரும் அவருடைய அஷ்டோத்திரத்தில் அடுத்தடுத்து வருவதில், விக்நராஜா முன்னவர், விநாயகர் பின்னவர்.

விநாயகர் என்றால் விசிஷ்டமான, அதாவது விசேஷம் பொருந்திய நாயகர் - சிறப்புப் படைத்த தலைவர். எல்லா ஸ்வாமிகளுமே நாயகர்கள்தான். அவர்கள் வேறே என்வோ ஒரு அஸுர, ராக்ஷஸ சத்ரு செய்ததற்கு எதிராகச்செய்து, அந்தக் கொடுமையை மாற்றி நல்லது பண்ணியிருப்பார்கள். அப்படிப் பண்ணியதால் நல்லதில் முன்னின்று அழைத்துப் போகிறவர் என்ற அர்த்தம் கொண்ட நாயகர்களாக அவர்கள் ஆகியிருக்கிறார்கள். இவர் எப்படி அவர்கள் எல்லோரையும்விட விசேஷம் பொருந்திய விநாயகரானார் என்றால் - இவர் வேறு அஸுரர்கள் பண்ணிய கொடுமைகளைப் போக்குவது மாத்திரமில்லாமல், தாமே விக்ந ராஜாவாக இருந்து உண்டாக்கிய இடைஞ்சல்களையும் போக்குகிறார். தம்மைத்தாமே விஞ்சிய நாயகராக இருப்பதால்தான் விநாயகர் என்ற தனிப் பெருமை பெறுகிறார்.

விக்நராஜர் என்பது போலவே விக்நராஜர் என்றும் சொல்வதுண்டு. விக்ந விநாயக பாத நமஸ் தே.
விக்நத்தை உண்டு பண்ணுவபருக்கும் விசிஷ்டமான நாயகர் என்று வைத்துக் கொள்ளலாம்.
விக்ந விநாயகர் நிக்ந விநாசகரும்தான். அதாவது விக்னங்களை அடியோடு நாசம் செய்கிறவர். ஸம்ஸ்கிருத 'ச'தமிழில் 'ய'ஆகிவிடும். ஆகாசம் - ஆகாயம் மாதிரி. இங்கேயோ ஸம்ஸ்கிருதத்திலேயே விக்ந விநாயகர் விக்ந விநாசகராகவும் இருக்கிறார்?

ஷோடஸ கணபதி 8 - விநாயகன் (மேலாம் தலைவனிலான்)

தம்மினும் மேலாம் தலைவனில் நாதனார் தண்ணளிக்கும்
பெம்மான் விநாயகர் பேறெனக் குன்றாப் பெருமையுடன்
இம்மையும் எப்போதும் ஈந்தே உளத்தில் இருந்திடுவான்
அம்மையும் அப்பனும் அண்ட மெனவோதும் ஆண்டவனே

tammiṉum mēlām talaivail nātaār taṇṇaḷikkum
pemmā vināyakar pēṟeṉak kuṉṟāp perumaiyuṭaṉ
immaiyum eppōtum īntē uḷattil iruntiṭuvā

ammaiyum appaṉum aṇṭa meṉavōtum āṇṭavaṉē

டிசம்பர் 28, 2015

ஷோடஸ கணபதி 7 - விக்னராஜன் (இடையூற்றுக்கரசன்)

“விக்ந ராஜர்” பற்றி மஹா பெரியாவாளின் அருள்வாக்கு - கட்டளைக் கலித்துறைக் கவிதை.

அடுத்த பேர் விக்ந ராஜர். அதாவது விக்நேச்வரர். விக்ந ஈச்வரரேதான் வித்நராஜா. ஈச்வரன் ராஜாவுக்கு ரொம்ப மேலே என்று தோன்றும். ஆனாலும் ரூட் மீனிங் பார்த்தால் ஈச்வரனும் ராஜா செய்கிறதைச் செய்பவன்தான். ஈச் என்கிற தாதுவுக்கு ஆட்சி பண்ணுவது என்றே அர்த்தம். ஆட்சி பண்ணுகிறவன் ஈச்வரன். ஸ்வாமி பெயர்களில் ராஜா, ஈச்வரன், நாதன் என்கிற வார்த்தைகள் ஒரே அர்த்தத்தில்தான் வரும். நடராஜா என்ற பேரையே நடேசன், நடேச்வரன் என்றும் சொல்கிறோம். ரங்கராஜா என்ற பேரையே ரங்கநாதன், ரங்கேசன் என்றும் சொல்கிறோம். திருநாவுக்கு அரசர் என்பதையே வாக்-ஈசர் என்கிறோம். அப்படி விக்ந ராஜா என்றாலும் விக்நேச்வரர் என்றாலும் ஒருத்தர்தான்.

பிள்ளையாருக்கு இருக்கப்பட்ட ப்ரத்யேகமான அதிகாரத்தைக் காட்டுவது விக்நராஜா என்ற பேர்தான். அவர் ப்ரத்யேகமாக எதற்காக ஏற்பட்ட ஸ்வாமி?ப்ரம்மா ஸ்ருஷ்டிக்கு;விஷ்ணு ஸ்திதிக்கு:ருத்ரன் லயத்துக்கு;துர்க்கை வெற்றிக்கு:லக்ஷ்மி செல்வத்திற்கு;ஸரஸ்வதி படிப்புக்கு;தன்வந்தரி வியாதி நிவாரணத்திற்கு என்றெல்லாம் பரமேச்வரனின் ப்ரபஞ்ச சர்க்கார்களில் ஒவ்வொருத்தருக்கு ஒரு ஆபீஸ் இருக்கிற மாதிரி, பிள்ளையாருடை¬- -ய ஆபீஸ் என்ன?விக்னங்களைப் போக்குவதுதான். எடுத்த காரியம் எதுவானாலும் அதில் விக்னம் - இடையூறு - உண்டாக்காமலிருக்கவே எடுத்த எடுப்பில் அவரைத் தொழுகிறோம். விக்ன நீக்கத்திற்கென்றே ஏகப் பரம்பொருள் எடுத்துக்கொண்ட ரூபம்தான் விக்நேச்வரர் அல்லது விக்நராஜா.

விக்னத்துக்கு ஈச்வரர், ராஜா என்றால் விக்னங்களை உண்டாக்குவதில் தலைவர் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக்கூடாது. விக்னங்களை அடக்கி அழிப்பதால் அவர் விக்ன ராஜாவாக இருக்கிறார். ஒரு ராஜாவுக்கு முக்யமான வேலை சத்ருக்களை அடக்கி வைப்பது. அப்படி விக்னங்களை அடக்கி வைக்கும் விக்ன ராஜா அவர்.

ஆராய்ச்சிக்காரர்கள் ஆதியில் உக்ர தேவதையாகப் பிள்ளையார் இருந்தபோது அவர்தான் விக்னங்களை உண்டு பண்ணுபவராக இருந்தாரென்றும், அதனால்தான் விக்நேச்வரர் என்ற பேர் ஏற்பட்டதென்றும், அப்புறம் ஸெளம்ய மூர்த்தியாக அவரை வழிபட ஆரம்பித்த பிறகும் அந்தப் பெயர் நீடித்து விட்டதென்றும் சொல்கிறார்கள்.

விக்னம் செய்வதும் உயர் நோக்கத்திலேயே !

அங்கங்கே அவர் விக்னமும் கொஞ்சம் உண்டாக்கித்தான் இருக்கிறார். பரமசிவனே திரிபுர ஸம்ஹாரத்திற்குப் புறப்படும்போது தம்மை நினைக்காமல் புறப்பட்டதால் அவருடைய ரதத்தின் அச்சு முறிந்து போகும்படிப் பண்ணியிருக்கிறார். ஆனால் இதெல்லாமும், பரமேச்வரனேயானாலும் அவருங்கூட லோக நிர்வாகத்தில் மற்ற தெய்வங்களுக்கு இருக்கிற அதிகாரத்தை மதித்து அதற்கு கீழ்படிந்து காட்டுவதுதான் முறை என்று புரிய வைப்பதற்குத்தானேயழிய, கெடுதல் பண்ண வேண்டும் என்பதற்காகவே கெடுப்பதல்ல. சட்டத்திற்கு Obey பண்ணனும். தனி ஆஸாமியைவிட - அவன் ஸாமியாகவே இருந்தால்கூட - சட்டந்தான் பெரிது என்று புரியச் செய்வதற்கும், அடங்கிப் போகும் அடக்கக்குணம் எவருக்கும் இருக்க வேண்டும் என்று பாடம் கற்பிப்பதற்காகவுந்தான் அவர் எப்போதாகிலும் விக்னம் உண்டாக்குவது. அதனால் அப்போதைக்கு பாதிக்கப்பட்டவர்கள் முடிவிலே நாசமானதாகக் கதையே கிடையாது. ஏனென்றால் விக்னத்தையே உண்டாக்கிய விக்நேச்வரரே தத்-த்வாரா (அதன் வழியாக) அதனால் பாதிக்கப்பட்டவருக்கு, நாம் பராசக்தியின் ஆட்சியில் விக்ன நிவாரணத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகார புருஷரை மறந்து நாமே ஸாதித்துவிட முடியும் எனறு கார்யத்தில் இறங்கியதால்தான் இப்படி உபத்திரவம் உண்டாகியிருக்கிறது என்ற நல்லறிவையும் ஊட்டி, அவர் அடக்கத்தோடு ப்ரார்த்தனை பண்ணும்படிச் செய்து விடுவார். அப்புறம் ஒட்டிக்கு இரட்டியாக நிரம்ப அநுக்ரஹம் புரிந்து விடுவார். அவர்தான் விக்நராஜா.

ஷோடஸ கணபதி 7 - விக்னராஜன் (இடையூற்றுக்கரசன்)

தடைகளை நீக்கும் தயாளன் கணேசனைத் தஞ்சமென
மடையற்ற வெள்ளமாய் மாதங்கம் நல்கும் மயலறுத்து 
கிடைக்கும் சிறப்புடன் கீழ்மையும் நீங்கியே கேண்மையுறும்
விடையேறி செல்வனார் விக்னரா சன்தாள் விரைபவர்க்கே

thadaika'lai :neekkum thayaa'lan ka'naesanaith thanjsamena
madaiya'r'ra ve'l'lamaay maathangkam :nalkum mayala'ruththu 
kidaikkum si'rappudan keezhmaiyum :neengkiyae kae'nmaiyu'rum

vidaiyae'ri selvanaar viknaraa santhaa'l viraipavarkkae

டிசம்பர் 27, 2015

ஷோடஸ கணபதி 6 - விகடன் (வேடிக்கை விநோதன்)

ஆறாவது ஷோடஸ நாமம்: விகடன்

காஞ்சி மஹாஸ்வாமிகளின் “தெய்வத்தின் குரலிலிருந்து”.

அடுத்த பேர் விகடர். அப்படிச் சொன்னாலே எல்லோருக்கும் வாரப் பத்ரிகை ஞாபகம்தான் வரும். ஹாஸ்யத்திற்கு, பரிஹாரம்-கேலி சிரிக்கச் சிரிக்கப் பண்ணுவதற்கு விகடம் என்று சொல்கிறோம். அந்த ஹாஸ்யத்திலே புத்தி சாதூர்யமும் இருக்கும். விகடகவி என்று வேடிக்கை வேடிக்கையாக வார்த்தை விளையாட்டுப் பண்ணுபவரைச் சொல்லியிருக்கிறது. அந்தப் பேரிலேயே வார்த்தை விளையாட்டு இருக்கிறது. பின்னாலிருந்து திரும்பப் பார்த்தாலும் விகடகவி என்றே வரும். ஸாமர்த்தியமாகப் பேசி ஏமாற்றுப் பண்ணுவதை அகடவிகடம் என்பார்கள். ஏமாற்று என்றாலும் அதிலிருக்கிற ஸாமர்த்தியத்தில் ஆச்சரியப்பட்டு சிரிக்கும் படியும் இருக்கும். விகடக் கலை என்றே இருக்கிறது. அதிலே தேர்ச்சி பெற்று மிமிக்ரி முதலான அயிட்டங்களைக் கச்சேரியாகவே செய்பவர்கள் இருக்கிறார்கள்.

ஸம்ஸ்கிருத டிக்ஷனரியில் விகட என்பதற்கு அர்த்தம் பார்த்தால் ஹாஸ்யம், தமாஷ் என்று இருக்காது. கோரம், பயங்கரம் என்றுதான் போட்டிருக்கும். ஆனால் நடைமுறையில் ஹாஸ்யம் பண்ணுவது, சிரிக்க வைப்பது, சிரிக்கும் படியாக ஏமாற்று ஸாமர்த்தியம் செய்வது-இதெல்லாந்தான் விகடம் விதூஷகன் காமிக் பாத்திரமென்று இந்த நாளில் சொல்கிறார்கள். அவன்தான் விகடன் என்று வைத்துக்கொண்டிருக்கிறோம். டிக்ஷனரி அர்த்தப்படி ப்ரதிநாயகன் அதாவது வில்லன் என்று இருக்கிற பாத்திரம்தான் விகடன் கோர ரூபத்தோடும், க்ரூரமான கார்யத்தோடும் இருப்பவன்.

ஆராய்ச்சிக்காரர்கள், 'ஆதிகாலத்தில் விநாயகர் க்ரூரமான உக்ர தேவதையாகக் குரூபமாகத்தான் இருந்தார். அப்புறந்தான் அவரை ஸெளம்ய மூர்த்தியாக்கியது'என்று சொல்வதுண்டு. நமக்கு அந்த ஆராய்ச்சியெல்லாம் வேண்டாம். நாம் உருப்படி, நம்முடைய உயிருக்கு ஒரு நிறைவும் நல்ல வழியிலான ஆனந்தமும் பெறுவதற்கு வேண்டியது பக்திதான். நம்முடைய அலைபாய்கிற அசட்டு மனஸை இழுத்து நிறுத்தி வைத்து அதற்கு நிறைவும், ஆனந்தமும் கொடுக்கிற ஒரு மூர்த்தி கிடைத்தால்தான் நமக்கு பக்தி சுரக்கிறது. விசாலமான யானை முகமும், தொப்பை வயிறுமாக இருக்கும் விநாயக மூர்த்தியைப் பார்த்தவுடனேயே நம் மனஸுக்கு இவை கிடைத்து தன்னால் பக்தி உண்டாகிறது. 

இந்த ப்ரத்யக்ஷமான தெரிகிற ஸமாச்சாரம். விக்நேச்வர மூர்த்தியைப் பார்த்தால் ஒரு குரூபியை அல்லது க்ரூர ஸ்வாபமுள்ளவரைப் பார்க்கிற மாதிரியா அருவருப்போ பயமோ ஏற்படுகிறது. கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டாம். ப்ரத்யக்ஷ அநுபவத்திற்கு எந்த ஆராய்ச்சியைக் கொண்டும் நிரூபணம் வேண்டாம். ஆகையால் அறிவாளிகள் என்கப்பட்டவர்கள் நம்மை மண்டு எனறு சொன்னாலும் சொல்லிவிட்டு போகட்டும். லோக வழக்கில் விகடம் பண்ணுவது என்றால் ஹாஸ்யம் பண்ணுவது என்று இருக்கற அர்த்தத்திலேயே நாம் விக்நேச்வரரை விகடனாக வைத்துக் கொள்வோம். அவர் நம்மை ஆனந்தமாகச் சிரிக்கப் பண்ணுகிற அழகு மூர்த்தியாக ப்ரத்யக்ஷத்தில் தெரிகிறபோது, ஆராய்ச்சி முடிவு சொல்கிறது என்பதற்காக அவர் பயமுறுத்துகிறவர், அசிங்கமாகத் தெரிகிறவர் என்று ஒப்புக் கொண்டால் அதுவும் மண்டுத்தனம் தான்.

விக்நேச்வரர் நிறைய பண்ணுபவர். அப்பா அம்மா ஸாக்ஷ£த் பார்வதீ பரமேச்வராள் ஊடல் பண்ணிக் கொண்டு கோபமும் தாபமுமாக இருக்கும்போது அவர் ஏதாவது வேடிக்கை குறும்பு பண்ணி அவர்களை ஒன்று சேர்த்து விடுவார். காக்காயாகப் போய் அகஸ்தியரை விகடமாக ஏமாற்றி நமக்குக் காவேரி கிடைக்கும்படிப் பண்ணுவார். பிரம்மச்சாரியாகப் போய் விபீஷணரை ஏமாற்றி காவேரி தீரத்தில் ஸ்ரீரங்கநாதர் ப்ரதிஷ்டையாகும் படி லீலை பண்ணுவார். கோகர்ண க்ஷேத்திரத்திலே அவனுடைய அண்ணாவான ராவணனையும் இதே மாதிரி அவர் ஏமாற்றி விளையாட்டுப் பண்ணித்தான் சிவலிங்கம் பிரதிஷ்டையாகும்படிச் செய்திருக்கிறார். இதெல்லாம் விகடர் பண்ணின Practical jokes அதாவது அவர் விளையாட்டாகப் பண்ணினதே

இன்னொருத்தனுக்கு வினையாக முடிந்தது. ஆனாலும் ஒரு அகஸ்தியர், ஒரு ராவணன், ஒரு விபீஷணன் ஏமாந்தாலும், இந்த லீலைக்கெல்லாம் நோக்கம், இந்த லீலைகளுடைய விளைவு லோக கல்யாணம்தான். காவேரியும், ஸ்ரீரங்கநாதரும், கைலாஸ லிங்கமும் யாரோ ஒரு தனி மநுஷ்யருக்கு உடைமையாக இல்லாமல் லோகம் முழுவதற்கும் ப்ரயோஜனப்படுகிற விதத்தில் அவர் செய்த அருள் லீலை!விகடமாகப் பண்ணிவிட்டார்.

ஷோடஸ கணபதி 6 - விகடன் (வேடிக்கை விநோதன்)

விகடன் விளையாடும் வேடிக்கை எல்லாம் வினைத்திருவாம்
அகத்தி யரையேய்த்தோர் ஆற்றைப் பெருகக் அருளியவன்
செகத்தோர் நலமுற சேர்த்தான் அரங்கனின் செவ்வடியை
உகந்தே விகடத்தை ஊற்றாய் பொழிகின்ற ஒப்பிலானே

vikaṭaṉ viḷaiyāum vēikkai ellām viaittiruvām
akatti yaraiyēyttōr āṟṟaip perukak aruḷiyavaṉ
cekattōr nalamua cērttāṉ araṅkaṉiṉ cevvaṭiyai

ukantē vikaattai ūṟṟāy poḻikiṉṟa oppilāē

டிசம்பர் 26, 2015

ஷோடஸ கணபதி 5 - லம்போதரன் (தொந்தி/பானை வயிறன்)

ஐந்தாவது ஷோடஸ நாமம்: லம்போதரன்

மஹாஸ்வாமிகள் வாக்கிலே லம்போதர நாமத்தைப் பற்றி:


அடுத்த பேர் லம்போதரர் தொங்குகிற வயிற்றுக்காரர் என்று அர்த்தம். லம்பம்-தொடங்குகிறது. உதரம்-வயிறு. அதாவது தொந்தியுள்ளவர். பிள்ளையார் என்றாலே வெள்ளைக்காரர்கள் pot-bellied என்று அவருடைய பானை வயிற்றைத்தான் சொல்கிறார்கள். பேழை வயிறும் என்று அகவலில் வருகிறது. கையில் பூர்ணமுள்ள மேதகத்தை வைத்திருப்பவர், தாமே பூர்ணவஸ்து என்று காட்டத்தான் பானை வயிற்றோடு இருக்கிறார். நல்ல நிறைவைக் காட்டுவது அது. அண்டாம்டங்கள் அதற்குள்ளே இருப்பதால் அதுவும் அண்ட ரூபத்தில் உருண்டையாயிருக்கிறது.

மோதகத்தில் தித்திப்புப் பூர்ணத்தை மா (வு) மூடி யிருக்கிறது. மோதகம் என்றால் ஆனந்தம். ஆனந்தம் தருவது. விக்நேச்வரரே அப்படிப்பட்ட ஒரு மோதகம்தான். ஆனந்தமாயிருப்பவர். அன்பு என்ற தித்திப்பான வஸ்துவை (ப்ரேமையை மதுரம் என்று சொல்வது வழக்கம். அப்படிப்பட்ட மதுரமான ப்ரேமையை) மற்றவர்களுக்கும் வழங்கி ஆனந்தமூட்டும் மோதகம் அவர். மா என்றால் ஆணை யானை என்று அர்த்தம். மோதகத்தில் மதுரமான வெல்லப் பூர்ணத்தை மூடிக்கொண்டு மா (வு) ச் சொப்பு இருக்கிற மாதிரி ப்ரேம ரஸம் நிறைந்த பூர்ண வஸ்துவான ப்ரம்மத்தின் மேல் ஆனை என்ற மாவின் ரூபத்தை வைத்து மூடிக்கொண்டு ஆனந்த ஸ்வரூபியான விக்நேச்வரர் உருவமெடுத்துக் கொண்டிருக்கிறார். உள்ளே பரம மதுரமான அன்புப் பூர்ணத்தை வைத்துக் கொண்ருப்பதைக் காட்டவே உருண்டைக் கொழுக்கட்டை உருவத்தில் வயிற்றை லம்போதகராக வைத்துக் கொண்டிருக்கிறார். உருண்டைக்கு ஆரம்பம், முடிவு சொல்ல முடியாது. அதனால் அது ப்ரம்மத்துக்கு ரூபகம் (உருவகம்) அதைக் காட்ட உருண்டையான தொப்பை வயிற்றோடு லம்போதரர் என்று விளங்குகிறார்.

தொப்பையும் தொந்தியுமாக உள்ள ஒருத்தைப் பார்த்தாலே நமக்கு ஒரு புஷ்டி, ஸந்துஷ்டி உண்டாகிறது. அதிலும் ஒரு குழந்தை அப்படி இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். எலும்பும் தோலுமாக நோஞ்சானாக உள்ள ஒருவரைப் பார்த்தால் நமக்கு இப்படி ஸந்தோஷம் உண்டாவதில்லை. ஸ்தூல சரீரம், க்ருசமான (ஒல்லியான) சரீரம் ஆகியவற்றை குணங்கள் ஸம்பந்தப்படுத்தியும் சொல்கிறோம். தொந்தியும் தொப்பையுமாக இருப்பவரைப் பார்த்தாலே வேடிக்கையாக இருக்கிறது. சிரிப்பாக வருகிறது. ஸுமுகரான பிள்ளையார் நாமெல்லாமும் சிரித்துக்கொண்டு ஸுமுகமாக இருக்க வேண்டுமென்றே தொப்பையப்பராக இருக்கிறார். எத்தனையோ தினுஸுக் கஷ்டங்களில் மாட்டிக் கொண்டு ஜனங்கள் தின்டாடுகிறதுகளே!அவர்களுக்கு ஃபிலாஸஃபி, கிலாஸஃபி சொல்லிக் கொடுத்தால் ஏறும், ஏறாதிருக்கும். அதனால் பார்த்த மாத்திரத்தில் ஒரு வேடிக்கை விநோதமாக அவர்கள் சிரித்து மகிழும்படி நாம் இருப்போம் என்றும் பிள்ளையார் லம்போதரராக இருக்கிறார்.

அதிலும் குழந்தைகளுக்குத்தான் பஹூ ஸந்தோஷம். தொப்பைக் கணபதியைப் பார்ப்பதில், அதற்கேற்றாற்போல் (புரந்தர) தாஸர் ஸங்கீதத்தில் பால பாடம் ஆரம்பிக்கும் போது பிள்ளையார் கீதத்தை லம்போதர லகுமிகரா என்றே ஆரம்பித்திருக்கிறார். லகுமிகரா என்றால் 'லக்ஷ்மிகரா';ஸெளபாக்கியங்களை உண்டாக்குபவர்.

ஷோடஸ கணபதி 5 - லம்போதரன் (தொந்தி/பானை வயிறன்)

பானை வயிறனே பார்வதி மைந்தனே பற்றறுத்தே
மோனம் அளிக்கும் முழுமுதல் தேவனே மோதகனே
கோனாய் மனமெனும் கோவிலில் வீற்றே குணமருளி
வானவர் நாயக வாரண பூரண வாழ்வருளே

pāṉai vayiṟaṉē pārvati maintaṉē paṟṟauttē
mōṉam aḷikkum muḻumutal tēvaṉē mōtakaṉē
kōṉāy maṉameṉum kōvilil vīṟṟē kuṇamaruḷi

vāṉavar nāyaka vāraṇa pūraṇa vāḻvaruḷē

டிசம்பர் 25, 2015

ஷோடஸ கணபதி 4 - (கஜகர்ணகன் - யானைக் காதன்)

நான்காவது ஷோடஸ நாமம்: கஜகர்ணகன்.

இதைப்பற்றி காஞ்சி மஹா ஸ்வாமிகள் என்ன சொல்லுகிறார்?

அடுத்த பேர் கஜகர்ணகர் அப்படியென்றால் யானைக் காது உள்ளவர். கஜமுகர் என்று முகம் முழுதையும் சொல்லிவிட்டால் போதாது. அவருடைய யானைக் காதும் யானைக் காதுதான் என்று பிரத்யேகமாகச் சொல்ல வேண்டும் என்கிறார்போல் இப்படிப் பேர் சொல்லியிருக்கிறது.
யானைக் காதிலே அப்படி என்ன விசேஷம்?மற்ற ஸ்வாமிக்கெல்லாம் காதைச் சுற்றிப் பெரிசாக ஒரு கால் வட்டம் மாதிரிப் போட்டுத் தோளோடு சேர்த்தே விக்ரஹங்கள் பண்ணியிருக்கும். இந்த வட்டப் பிரபைக்கு உள்ளேயும், கிரீடத்துக்குக் கீழேயும் அந்த ஸ்வாமியின் காது எங்கே இருக்கிறது என்று நாம் தேடிக் கண்டு பிடிக்கும் படியே இருக்கும். அநேகமாக, பெரிஸாகத் தொங்கும் குண்டலத்தை வைத்துத்தான் காதைத் தெரிந்து கொள்ள முடியும். விக்நேச்வரர் ஒருத்தர்தான் இதற்கு விலக்கு. அவருடைய யானைக் காது அவருடைய பெரிய முக மண்டலத்துக்கு ஸம அளவாக இரண்டு பக்கமும் விரித்து விசாலமாக ப்ரகாசிக்கிறது.

நாம் பண்ணும் பிரார்த்தனையெல்லாம், நம்முடைய முறையீட்டையெல்லாம் கேட்க வேண்டியது ஸ்வாமியின் காதுதானே? அந்தக் காது தெரிந்ததும் தெரியாமலும் இருந்தால் என்னவோபோல்தானே இருக்கிறது?கஜகர்ணகராக விக்நேச்வரர்தான் தன்னுடைய பெரிய காதை நன்றாக விரித்துக்கொண்டு மற்ற தெய்வங்களுடையதைப் போல் மண்டைப் பக்கமாக ஒட்டிக் கொள்கிற மாதிரி இல்லாமல் முன் பக்கமாக விரித்துக்கொண்டு - நம் ப்ரார்த்தனைகளை நன்றாகக் கேட்டுக் கொள்கிறார் என்ற உத்ஸாஹத்தை நமக்குக் கொடுக்கிறார்.

மற்ற எல்லாப் பிராணிகளுக்கும் காது குழிவாகக் கிண்ணம் மாதிரி இருக்கிறது. யானைக்குத்தான் FLAT -ஆக விசிறி மாதிரி இருக்கிறது. கேட்கிற சப்தம் சிதறிப் போகாமல் பிடித்து உள்ளே அனுப்புவதற்காகவே மற்ற ப்ராணிகளுக்கு குழிந்து இருப்பது. யானைக்குக் கூர்மையான ச்ரவண சக்தி (கேட்கும் ஆற்றல்) இருப்பதால் சிதறாமல் பிடித்து உள்ளே அனுப்பணும் என்கிற அவசியம் இல்லை. பிள்ளையார் நம் வேண்டுதல்களை நன்றாகக் கேட்டுக் கொள்வார்.

யானை பெரிய காதை விசிறி மாதிரி ஆட்டிக் கொள்வது ரொம்ப அழகு. பிராணி வர்க்கத்திலேயே யானை ஒன்றால்தான் இப்படிக் காதால் விசிறி போட்டுக் கொள்ள முடிவது. ஏதாவது பூச்சி பொட்டை விரட்டுவதற்காக ஒரு தரம். இரண்டு தரம் வேண்டுமானால் மாடுகூடக் காதை ஆட்ட முடியுமே தவிர, யானை மாதிரி ஸதா பண்ண முடியாது. மாடு ஏதோ கொஞ்சம் ஆட்டுவதற்குக்கூட ஸ்ட்ரெயின் பண்ணிக் கொள்ள வேண்டியிருக்கிறது. யானைதான் அநாயாஸமாக, ரொம்ப இயற்கையாக எப்பப் பார்த்தாலும் காதை ஆட்டிக் கொண்டே இருப்பது. கஜாஸ்பாலம் (கஜ ஆஸ்பாலம்) கஜதாளம் என்றே அதற்குப் பேர் கொடுத்து வைத்திருக்கிறது. ஆனை விசிறி மாதிரியுள்ள காதை ஒரே சீராகத் தாளம் போடுகிற மாதிரி அசைத்துக்கொண்டே இருக்கிறது.

மனிதர்கள் யானை மாதிரிக் காதை ஆட்டுவது சிரம ஸாத்தியமான ஒரு பெரிய வித்தை. அதைத்தான் கஜகர்ணம் போட்டாலும் நடக்காது என்று சொல்கிறோம். கஜகர்ணம் என்பதை கஜகரணம் என்று நினைத்துக்கொண்டு யானை மாதிரி குட்டிக் கரணம் போட்டாலும் நடக்காததாக்கும் என்று அர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள். அது ஸரியில்லை. யானை மாதிரி காதை ஆட்டுகிற வித்தைத்தான் கஜகர்ணம்.

கஜகர்ணம், கோகர்ணம் போடுவது என்பது முழு வசனம். கோகர்ணம் என்கிற வார்த்தையில் கர்ணம் என்றால் காது என்று அர்த்தமில்லை. கர்ண என்பது க்ரியா பதமாக (வினைச் சொல்லாக) வரும்போது துளைப்பது, குத்துவது என்று அர்த்தம். ஒரு மாட்டின் உடம்பில் விரலாலோ தார்க்குச்சியாலோ குத்தினால் உடனே அதன் உடம்பு முழுக்க சுழி

சுழியாக அலை மாதிரி ஒரு சலனம் பரவும். இதே மாதிரி ஒரு மநுஷ்யர் பண்ணிக் காட்டுகிற அபூர்வமான வித்தைத்தான் கோகர்ணம் கஜகர்ண வித்தையும் அதே மாதிரிதான், ஸுலபத்தில் கற்றுக் கொள்ள முடியாது.நமக்கு ரொம்ப சிரமமாயிருப்பதை விக்நேச்வரர் விளையாட்டாகப் பண்ணுவதை கஜகர்ணர் என்ற பேர் காட்டுகிறது.

யானை காதை ஆட்டுவதில் அழகு இருப்பதோடு ஒரு பர்பஸும் இருக்கிறது. மதம் பிடிக்கிற காலத்தில் அதன் முகத்தில் கன்னப் பிரதேசத்தில் மத ஜலம் ஸதாவும் துளித்துக் கொண்டிருக்கும். அதற்காக ஈ, எறும்புகள் ஏகமாக மொய்க்க வரும். அதுகளை விரட்டுவதற்கு வசதியாகவே பகவான் யானைக்கு விசிறிக்காதைக் கொடுத்து, அதனால் விசிறிக் விட்டுக் கொள்ளும் திறமையும் கொடுத்திருக்கிறார்.
விக்நேச்வரரின் கன்னத்தில் மத ஜலம் வழிந்து கொண்டு இருப்பதை ஆச்சாரியாள் கபோல தான வாரணம் என்று (கணேச பஞ்சரத்தினத்தில்) சொல்லியிருக்கிறார். கபோலம் என்றால் கன்னம். தானம் என்றால் மத ஜலம்.

பிள்ளையார் பெருக விடும் மத ஜலம் என்பது ஆனந்த தாரைதான், க்ருபா தாரைதான். பரம மதுரமாக இருக்கும் அம்ருதம் அது. அந்த மாதூர்ய மத நீரை ருசி பார்ப்பதற்காக வண்டுகள் ஏகமாக வரும். இதையும் ஆச்சார்யாள் ஒரு ஸ்தோத்திரத்தில் சொல்லியிருக்கிறார்.

கலத்-தான கண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம்

மத ஜலத்தை மொய்க்கும் வண்டுகளை விரட்டுவதற்காகப் பிள்ளையார் விசிறிக் காதை ஆட்டிக் கொண்டே இருக்கிறார். கோபத்தில் விரட்டுவதல்ல. குழந்தை ஸ்வாமிக்கும் இது ஒரு விளையாட்டுதான். வண்டுகளும் அவரிடத்தில் இந்த விளையாட்டுக்காகத்தான் வருவது. அவருடைய தர்ஸனமே அவற்றுக்கு அம்ருதமாக இருக்குமாதலால் மத ஜலத்தை குடிக்க வேண்டுமே என்பதில்லை. விளையாடனும், அவர் தங்களுக்கு விசுறனும் என்றேதான் அதுகள் கன்னக்கண்டை வந்து மொய்க்கும். நாம் குழந்தை காதில் விளையாட்டாக ருர்ர் என்று கத்தி அது மயிர்கூச்சலெடுப்பதைப் பார்த்து ஸந்தோஷப்படுகிறோல்லியோ?அந்த மாதிரிப் பிள்ளையாருடைய பெரிய காதிலே அதிர அடிக்கிற மாதிரி தங்களுக்கே உரிய ஜங்கார சப்தம் போட்டு வேடிக்கை பண்ணனும் என்றே வண்டுக் கூட்டம் வரும். அந்த வேடிக்கை விளையாட்டை புரிந்து கொண்டு அவரும் காதை ஆட்டி ஆட்டி அதுகளை விரட்டுகிற மாதிரிப் பண்ணுவார். அந்தக் காற்றிலே அதுகள் மாற்றி மாற்றி ஒடிப் போவதும், மறுபடி வந்து மொய்ப்பதுமாக அமர்க்களம் பண்ணும், மதஜலத்திலே விசிறிக் காதின் காற்றுப் பட்டு ஸ்வாமிக்கு ஜில்லென்று ஆனந்தமாயிருக்கும்.

ராக சைதன்யர் என்று ஒருத்தர் மஹாகணபதி ஸ்தோத்திரம் என்று செய்திருக்கிறார். அதில் மந்த்ர சாஸ்திர விஷயங்களெல்லாம் வருவதோடு அழகான கவிதா வர்ணனையும் அழகான வாக்கில் வருகிறது. விக்நேச்வரர் விசிறிக் காதை ஆட்டி வண்டுக் கூட்டத்தை விரட்டுவது போல விளையாடுவதை அதில் நீள நெடுக வார்த்தைகளைக் கோத்து அழகாகச் சொல்லியிருக்கிறது.

தாநாமோத-விநோத-லுப்த-மதுப ப்ரோத்ஸாரணாவிர்பவத்
கர்ணாந்தோலன-கேலனோ விஜயதே தேவோ கணக்ராமணீ

தான ஆமோதம் என்றால் மதஜலத்தின் ஸுகந்தம். ஸ்வாமி பெருக்கும் மத ஜலம் கமகமவென்று வாஸனை அடிக்கிறது. அநேத விநோதமான, அதாவது இன்பமூட்டுகிற வாஸனையை மோந்ததில் வண்டுகளுக்கு ஒரே பேராசை உண்டாகிறது. மத ஜலத்தை அப்படியே குடித்துவிட வேண்டுமென்று, லுப்த மதுப என்றால் பேராசை கொண்ட வண்டுகள். அல்லது வாஸனையில் மயங்கிப்போன வண்டுகள் என்றும் அர்த்தம் பண்ணலாம். அந்த வண்டுகளை விரட்டணுமென்று ஒரு விளையாட்டு ஆவிர்பாவமாகிறது, விளைகிறது.

கேலனம் என்றால் விளையாட்டு. என்ன விளையாட்டு கர்ணாந்தோலன கேலனம் கர்ண ஆந்தோலனம் என்றால் காதை முன்னேயும் பின்னேயுமாக ஆட்டுவது.

ஊஞ்சலுக்கு ஆந்தோலம் என்று பெயர். தோலம் என்று மட்டும் சொன்னாலும் அதே அர்த்தம்தான். தோல உத்ஸவத்தைத்தான் டோலோத்ஸவம் என்று சொல்லி ஊஞ்சல் போட்டு ஸ்வாமியை ஆட்டி ஸந்தோஷபப் படுகிறோம். டோலி கூட இதோடு ஸம்பந்தப்பட்டதுதான்.

காதை ஆட்டி வண்டை விரட்டி விளையாடும்போது விக்நேச்வரர் கூடுதலான அழகாக விளங்குகிறார். வெற்றி வீரராக விளங்குகிறார். படையெடுக்கும் வண்டுக் கூட்டத்தை விரட்டியடிக்கும் வெற்றி வீரராக விளங்குகிறார்.

இங்கே பிள்ளையாரை கணக்ராமணி என்ற பெயரில் குறிப்பிட்டிருக்கிறது. க்ராமணி என்றால் ஒரு குறிப்பிட்ட கூட்டத்துக்குத் தலைவர். கிராமம் என்றால் சின்ன ஊர் என்ரு பொதுவாக நாம் எடுத்துக் கொள்ளும் அர்த்தம். அதில் தலையாரியாக இருப்பவர் கிராமணி. அப்படியிருந்தவர்களின் வம்ஸத்தினர்தான் இப்போதும் ஜாதிப் பெயராக கிராமணி என்று போட்டுக் கொல்கிறார்கள். சிவ கர்ணங்கலுக்கு தலைவராக, கணபதி-கணேசன்-கணாதிபன் கணநாயகன் என்றால்லாம் சொல்லப்படுபவரை இங்கே கணக்ராமணி என்று அழகான வார்த்தை போட்டுச் சொல்லியிருக்கிறது.
கணக்ராமணியாக ஏகப்பட்ட பரிவார கணங்கள் சூழ இருக்கிறவரானாலும், அவர்கள் யாரும் தனக்குச் சாமரம் போட வேண்டுமென்றில்லாமல் தானே தன் காதுகளையே ஆட்டிப் போட்டுக் கொள்கிறார். சாமர கர்ணர் என்று அதனால் பேர்.

மூஷிக வாஹன மோதக ஹஸ்த
சாமர கர்ண...."

கஜகர்ணராக இருப்பதால்தான் அப்படித் தனக்குத் தானே தன்னாலேயே சாமரம் போட்டுக்கொண்டு கரணம், காரணம், கர்த்தா, கருவி எல்லாமே தாம்தான் என்று காட்டுகிறார்.

ஷோடச கணபதி 4 - கஜகர்ணகன் ( யானைக் காதன்)

மதநீர் மதுவிழை வண்டினம் வேண்டும் மலர்முகத்தோய்
இதமாய் விரட்ட இருசெவி யாட்டும் இபமுகத்தோய்
முதமே முருகோன் முதல்கஜ கர்ணா முழுமுதலோய்
நிதமும் துதிப்போம் நிலைபெறச் செய்திடு  நிர்மலனே


matanīr matuviḻai vaṇṭiṉam vēṇṭum malarmukattōy
itamāy viraṭṭa irucevi yāṭṭum ipamukattōy
mutamē murukōṉ mutalkaja karṇā muḻumutalōy
nitamum tutippōm nilaipeṟac ceytiṭu  nirmalaṉē

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...