டிசம்பர் 31, 2015

ஷோடஸ கணபதி 10 - கணாத்யக்ஷன் ((சிவ)கணங்களின் நாயகன்)

கணாத்யக்ஷன் ((சிவ)கணங்களின் நாயகன்)

தூமகேதுர்-கணாத்யக்ஷ: ஷோடச நாமங்களில் தூமகேதுவுக்கு அப்புறம் 'கணாத்யக்ஷர்'கண-அத்யக்ஷர். அத்யக்ஷர் என்றால் ஸூபர்வைஸ் பண்ணுகிறவர். தலைவர். (தலையை வைத்தேதான் வெள்ளைக்காரர்களும் Head of the Government, Head Priest என்றெல்லாம் சொல்கிறார்கள்!) ஸமீபகாலம் வரை வைஸ் சான்ஸ்லர்களை உப- அத்யக்ஷர் என்றே சொல்லி வந்தோம்.

கண-பதி, கணேசர் (கண-ஈசர்) , கணாதிபதி (கண-அதிபதி) , கணநாதர் என்றெல்லாம் சொன்னால் என்ன அர்த்தமோ அதுதான் கணாத்யக்ஷர் என்பதற்கும் அர்த்தம்.

பரமேச்வரன் தம்முடைய பூதகணங்களுக்கு அதிபதியாக விக்நேச்வரரையும், தேவகணங்களுக்கு அதிபதியாக இளைய பிள்ளை ஸுப்ரஹ்மண்யரையும் வைத்தார். 'கஜாநநம், பூதகணாதி ஸேவிதம்' என்கிறோம். இளைய பிள்ளையை தேவஸேநாதிபதி என்கிறோம். அவர் இரண்டு விதத்தில் அப்படி இருக்கிறார். தேவர்களின் ஸேனைக்கு அதிபதி;தேவேந்திரனின் குமாரியான தேவஸேனைக்குப் பதி!தேவர்களுக்கு ஆதிபத்யம் தாங்குவதைவிட, பூதங்களைக் கட்டி மேய்த்து அடக்கியாளுவதுதான் கஷ்டம். மூத்தபிள்ளை இந்தக் கஷ்டமான பொறுப்பை 'ஈஸி'யாக ஆற்றிக் கொண்டு ஆனந்தமாயிருக்கிறார்.

தேவ கணம், மநுஷ்ய கணம் ஆகியவையும் அவருடைய மஹாசக்தியையும், அருள் உள்ளத்தையும் தெரிந்து கொண்டு அவருக்கு அடங்கி பூஜை பண்ணத்தான் செய்கின்றன. ஆனபடியால் அவர் கணாத்யக்ஷர் என்கிற போது ஸகலவிதமான ஜீவகணங்களுக்குமே அத்யக்ஷர் என்று சொல்லலாம்.

ஷோடஸ கணபதி 10 - கணாத்யக்ஷன் ((சிவ)கணங்களின் நாயகன்)

கணநா தனைநுதற் கண்ணன் புதல்வன் கணபதியை
கணமும் மறவீர் கருத்தில் இருத்துவீர் காத்திடுவான்
தணலென துன்பமும் தாங்கத் துணையாய் தயைபுரிவான்
வணங்க வளமுடன் வாழ்வும் வழங்கிடும் வாரணனே


kaṇanā taṉainutaṟ kaṇṇaṉ putalvaṉ kaṇapatiyai
kaṇamum maṟavīr karuttil iruttuvīr kāttiuvā
taṇaleṉa tuṉpamum tāṅkat tuṇaiyāy tayaipurivā

vaṇaṅka vaḷamuṭaṉḻvum vaḻaṅkiṭum vāraṇaṉē

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...