ஜனவரி 19, 2012

வெண்பா பைத்தியம்…



சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தாற் போல, என்னுடைய நண்பர் இராசா  என்னை வெண்பா இலக்கணம் பற்றி ஏதோ கேட்கப் போக, பரணில் தூங்கிக்கொண்டிருந்த வெண்பா பிசாசு என்னை மீண்டும் பிடிக்க, உடனே ஒரு வெண்பா!


இது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா… வெண்பாக்களுக்கே உரியவை, “இதனால் இது” என்கிற காரண விளக்கங்களும் அல்லது “எதனால் இது” என்கிற கேள்வி-பதில்களும் அல்லது “இவ்வாறிருக்க அவ்வாறு ஏன்” என்கிற காரணம் ஒற்றிய கேள்விகளும்!


அந்த அடிப்படையை ஒட்டித்தான், எண்ணம் எப்படி வாழ்வைப் புதுக்குகிறது என்று எழுதியதும். திருத்தணிகை விசாகப்பெருமாளையர் அவர்கள் எழுதிய யாப்பிலணக்கண நூலைப் ஒருமுறை படித்து சரிபார்த்துக்கொண்டேன்..


பண்ணிலாமல் பாடலுண்டோ கண்ணிலாமல் காட்சியுண்டோ

உண்ணிலார்க்கு ஊட்டமுண்டோ எண்ணிடாது ஏற்றமுண்டோ

வண்ணமுதாம் வாழ்வினிலே எண்ணிறந்த இன்பமுண்டே

எண்ணியென்றும் வாழுவதே வாழ்வு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...