ஜனவரி 18, 2012

தந்திரப் பேச்சு -- கவிமாமணி இளையவன்



[நான் இரசித்த சில கவிதைகளை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். மின்பெருவெளி  வலையிலே, எத்தனைச் செல்வங்கள் கொட்டிக் கிடக்கின்றன? எத்தனை சிந்தனையாளர்கள் எவ்வளவு இலகுவாக எழுதுகிறார்கள். வெண்பா எழுதுவது பற்றி நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கையில், வலையில் "வெண்பா வடிக்கலாம் வா" என்கிற ஒரு குழுமம் உருவாக்கப்பட்டு, வெகு நாட்களாக நான் தொடர்பில்லில்லாத என்னுடைய "தென்றல்" துவக்ககால நண்பர் திரு. வாஞ்சிநாதனை நினைவு கூர்ந்து, வலையில் தேடும்போது வாஞ்சியைக் காணவில்லை; ஆனால் வாஞ்சையுடன் என்னை எண்பத்தைந்தாம் வருடம் டொராண்டோ நகரில் ஒருநாளை பகிர்ந்துகொண்ட மதிப்பிற்குறிய மின்னணுவியல் துறை பேராசிரியர் பசுபதி தானுமுவந்து பகிர்ந்துகொண்ட கவிதை இதோ...! கவிமாமணி இளையவன்.. அவர் தமிழே இனிமை, இளமை – யாருக்கும் இளைக்காத புலமை! நீங்களும் ரசிக்கலாமே!]



தந்திரப் பேச்சு -- கவிமாமணி இளையவன்


போஜன் என்பவன் ஒர்அரசன்
புலவர் போற்றும் பேரரசன்
பூஜை எல்லாம் சிவன்மேலே
பொழுதும் நினைவு அவர்மேலே

ஏழை ஒருவன் "சிவபெருமான்"
எங்கும் இல்லை" எனச்சொன்னான்
வாழை மரபாய்க் கொடைத்தன்மை
வாய்ந்தோன் போஜன் இதைக்கேட்டான்

"சிவனை இல்லை என்கின்றாய்,
சொல்வது எப்படி" எனக்கேட்டான்
அவனோர் ஏழை ஆனாலும்
அறிவின் திறனால் விடைசொன்னான்

சங்கர நாரா யணன்எனவே
சங்குத் திருமா லிடம்பாதி
அங்கம் தந்தார் மீதியினை
அன்பாய்ச் சக்திக் களித்திட்டார்

இரண்டு பாதி போனதனால்
இனிமேல் சிவனார் "ஏ'தென்றான்
அருமை விளக்கம் எனப்போற்றி
அரசன் கேள்வி சிலகேட்டான்.

சந்திர கலையது எங்கென்றான்
சந்தி ரனிடமே போச்சென்றான்
விந்தை! கங்கை எங்கு' என
"வந்தே சங்கம் இங்" கென்றான்

சிவனின் வீரம் எங்கென்றான்
சேர்ந்தது உங்களை எனச்சொன்னான்
தவழும் திருவோ டெங்கென்றான்
தனதே அதுவென விடைசொன்னான்

ஏழையின் கையில் திருவோடு;
ஏந்தல் பார்த்தான் கனிவோடு
வாழும் தந்திரப் பேச்சுக்கு
வரிசை அளித்தான் மகிழ்வோடு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...