அக்டோபர் 28, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 39

धृतच्छायं नित्यं सरसिरुहमैत्रीपरिचितं
निधानं दीप्तीनां निखिलजगतां बोधजनकम्
मुमुक्षूणां मार्गप्रथनपटु कामाक्षि पदवीं
पदं ते पातङ्गीं परिकलयते पर्वतसुते ३९॥

த்ருதச்சா²யம் நித்யம் ஸரஸிருஹமைத்ரீபரிசிதம்
நிதானம் தீ³ப்தீநாம் நிகி²லஜக³தாம் போ³ஜனகம்
முமுக்ஷூணாம் மார்க³ப்ரத²னபடு காமாக்ஷி பத³வீம்
பத³ம் தே பாதங்கீ³ம் பரிகலயதே பர்வதஸுதே 39

மலைமகளே, காமாக்ஷீ! எப்போதும் சூரியனின் மனையாளான சாயையோடு கூடியதாயும், தாமரைகளின் நட்பை அடைந்ததாயும், ஒளிக்குக் காரணமாயும், உலகனைத்திற்கும் ஞானத்தைத் தருவதாகவும், முத்தியை நாடுவோர்க்கு தக்க வழியைக் காட்டுவதில் திறமையுள்ள உன் திருவடிகள் சூரியனின் தன்மை பெற்றதாக இருக்கின்றன.

மலைமகள் காமாட்சீ! மாலியின் சாயை மணத்ததாய்நீர்
சலசத்தின் நட்புற்ற தாயொளிக் கேதுவாய், தாலமிதில்
வலவ றிவளிக்க வல்லதாய், முத்தி வழிவிழைந்தால்
நலவழி காட்டிட ஞாயிறு போன்றாம்நின் நற்பதமே!


மாலி-சூரியன்; மணத்தல்-கூடுதல்; நீர்சலசம்-தாமரை; ஏது-காரணம்; தாலம்-உலகம்; வலவறிவு-வலிய ஞானம்;

அக்டோபர் 27, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 38

दिनारम्भः सम्पन्नलिनविपिनानामभिनवो
विकासो वासन्तः सुकविपिकलोकस्य नियतः
प्रदोषः कामाक्षि प्रकटपरमज्ञानशशिन-
श्चकास्ति त्वत्पादस्मरणमहिमा शैलतनये ३८॥

தி³னாரம்ப: ஸம்பந்-நளின விபினாநாமபினவோ
விகாஸோ வாஸந்த: ஸுகவி பிகலோகஸ்ய நியத:
ப்ரதோ³ஷ: காமாக்ஷி ப்ரகடபரமஜ்ஞான ஶஶின-
்சகாஸ்தி த்வத்பாத³ஸ்மரண மஹிமா ைலதனயே 38

மலைமகளே! காமாக்ஷி! உன் பாதங்களை தியானிப்பதன் பெருமை, செல்வாமாகும் தாமரைக்காடுகளுக்கு புதிய வைகறையாகவும், நற்கவிகளாம் குயிற்கூட்டத்துக்கு நிலைத்த வசந்தகால தோற்றமாகவும், நிறையறிவாம் சந்திரனுக்கு மாலை நேரமாகவும் விளங்குகிறது

உனது கழல்களை உள்கும் பெருமை, உடைமைமிக்க
வனச வனத்திற்கு வைகறை யென்றாகும்; வாக்கியராம்
வனப்பிரி யர்க்கு வசந்தம்போ லாம்நிறை வாசனம
வனற்குமா லையாய் மலைமகள் காமாட்சீ மன்னிடுதே!

உள்கு-தியானித்தல்; உடைமை-செல்வம்; வனசம்-தாமரை; வைகறை-விடியல்; வாக்கியர்-கவிஞர்; வனப்பிரியர்-குயிற்கூட்டம்; வாசனம்-ஞானம்; ம - சந்திரன்; வனன் - அழகு (ம வனன் - சந்திர அழகர்); மன்னுதல்- நிலைபெறுதல்.

அக்டோபர் 26, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 37

उदीते बोधेन्दौ तमसि नितरां जग्मुषि दशां
दरिद्रां कामाक्षि प्रकटमनुरागं विदधती
सितेनाच्छाद्याङ्गं नखरुचिपटेनाङ्घ्रियुगली-
पुरन्ध्री ते मातः स्वयमभिसरत्येव हृदयम् ३७॥

உதீ³தே போ³தேந்தௌ³ தமஸி நிதராம் ஜக்³முஷி த³ாம்
³ரித்³ராம் காமாக்ஷி ப்ரகடமனுராக³ம் வித³தீ
ஸிதேனாச்சா²த்³யாங்க³ம் நக²ருசிபடேனாங்க்ரியுக³லீ-
புரந்த்ரீ தே மாத: ஸ்வயமபிஸரத்யேவ ஹ்ருʼ³யம் 37

காமாக்ஷீ அன்னையே! ஞானமெனும் நிலவு உதித்ததும், இருள் முழுவதுமாக உலைவுற்று மறையும் நிலையடைந்ததும், தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியவளாக, வெண்நக ஒளியாம் மேலாடையால் உடலை மறைத்துக்கொண்டு உன் திருவடிகளாம் வேசி என் இதயத்தைத் தானாக வந்தடையட்டும்.

உட்கண் நிலவு உதித்த றியாமை உலைந்தொழிய,
கட்புலன் காதன்மை காட்டிட, வெண்ணுகிர் காந்தியாகும்
ஒட்டிய மேலாடை ஒன்றால் உடலொளி உன்னடியாம்
பொட்டி இதயம் புகட்டும்தாய் காமாட்சீ போய்வலிந்தே!


உட்கண்-ஞானம்; உலைந்து-அழிந்து; கட்புலன்-காணும் புலன் (கண்); காதன்மை-ஆசை; வெண்ணுகிர்-வெண் நகம்; உடலொளி-உடல் மறைக்கும்; பொட்டி-வேசி

அக்டோபர் 25, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 36

महामन्त्रं किञ्चिन्मणिकटकनादैरिव​ जपन्
क्षिपन्दिक्षु स्वच्छं नखरुचिमयं भास्मनरजः
नतानां कामाक्षि प्रकृतिपटुरच्चाट्य ममता-
पिशाचीं पादोऽयं प्रकटयति ते मान्त्रिकदशाम् ३६॥

மஹாமந்த்ரம் கிஞ்சித் மணிகடக நாதை³: இவ ஜபன்
க்ஷிபந்தி³க்ஷு ஸ்வச்ச²ம் நக²ருசி மயம் பாஸ்மனரஜ:
நதாநாம் காமாக்ஷி ப்ரக்ருʼதி படுரச்சாட்ய மமதா-
பிாசீம் பாதோ³யம் ப்ரகடயதி தே மாந்த்ரிக த³ாம் 36

காமாக்ஷீ! இயல்பாகவே உன்பாதங்கள் வணங்குவோரின் அகந்தை என்னும் பிசாசினை ஓட்டுவதில், இரத்தினச் சிலம்புகளின் ஒலிமூலம் சிறிது சிறந்த மந்திரத்தை உருசெய்வது போலுள்ள, நாற்புறமும் நகவொளியாம் விபூதியை ஊதியெறிந்தும் விரட்டும் ஒரு தேர்ந்த மந்திரவாதிபோல் உள்ளன.

சிறிதே மணிசேர் சிலம்பொலி கள்செய்யும் சீர்த்தவெண்ணால்
எறிந்தே திசைதொறும் எல்நக நீற்றால் இடும்பையெனும்
சிறியோன் பிசாசை செறுத்தோட்ட மந்திரம் செய்யியல்பை
அறிந்தோம் அடிகளில்! அன்னைகா மாட்சீ அணைந்தவர்க்கே!


சீர்த்த-சிறந்த; எண்-மந்திரம்; எல்-ஒளி; நீறு-விபூதி; இடும்பு-அகந்தை; செறுத்து-வென்று; அணைதல்-சேர்தல்

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...