அக்டோபர் 26, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 37

उदीते बोधेन्दौ तमसि नितरां जग्मुषि दशां
दरिद्रां कामाक्षि प्रकटमनुरागं विदधती
सितेनाच्छाद्याङ्गं नखरुचिपटेनाङ्घ्रियुगली-
पुरन्ध्री ते मातः स्वयमभिसरत्येव हृदयम् ३७॥

உதீ³தே போ³தேந்தௌ³ தமஸி நிதராம் ஜக்³முஷி த³ாம்
³ரித்³ராம் காமாக்ஷி ப்ரகடமனுராக³ம் வித³தீ
ஸிதேனாச்சா²த்³யாங்க³ம் நக²ருசிபடேனாங்க்ரியுக³லீ-
புரந்த்ரீ தே மாத: ஸ்வயமபிஸரத்யேவ ஹ்ருʼ³யம் 37

காமாக்ஷீ அன்னையே! ஞானமெனும் நிலவு உதித்ததும், இருள் முழுவதுமாக உலைவுற்று மறையும் நிலையடைந்ததும், தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியவளாக, வெண்நக ஒளியாம் மேலாடையால் உடலை மறைத்துக்கொண்டு உன் திருவடிகளாம் வேசி என் இதயத்தைத் தானாக வந்தடையட்டும்.

உட்கண் நிலவு உதித்த றியாமை உலைந்தொழிய,
கட்புலன் காதன்மை காட்டிட, வெண்ணுகிர் காந்தியாகும்
ஒட்டிய மேலாடை ஒன்றால் உடலொளி உன்னடியாம்
பொட்டி இதயம் புகட்டும்தாய் காமாட்சீ போய்வலிந்தே!


உட்கண்-ஞானம்; உலைந்து-அழிந்து; கட்புலன்-காணும் புலன் (கண்); காதன்மை-ஆசை; வெண்ணுகிர்-வெண் நகம்; உடலொளி-உடல் மறைக்கும்; பொட்டி-வேசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...