அக்டோபர் 25, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 36

महामन्त्रं किञ्चिन्मणिकटकनादैरिव​ जपन्
क्षिपन्दिक्षु स्वच्छं नखरुचिमयं भास्मनरजः
नतानां कामाक्षि प्रकृतिपटुरच्चाट्य ममता-
पिशाचीं पादोऽयं प्रकटयति ते मान्त्रिकदशाम् ३६॥

மஹாமந்த்ரம் கிஞ்சித் மணிகடக நாதை³: இவ ஜபன்
க்ஷிபந்தி³க்ஷு ஸ்வச்ச²ம் நக²ருசி மயம் பாஸ்மனரஜ:
நதாநாம் காமாக்ஷி ப்ரக்ருʼதி படுரச்சாட்ய மமதா-
பிாசீம் பாதோ³யம் ப்ரகடயதி தே மாந்த்ரிக த³ாம் 36

காமாக்ஷீ! இயல்பாகவே உன்பாதங்கள் வணங்குவோரின் அகந்தை என்னும் பிசாசினை ஓட்டுவதில், இரத்தினச் சிலம்புகளின் ஒலிமூலம் சிறிது சிறந்த மந்திரத்தை உருசெய்வது போலுள்ள, நாற்புறமும் நகவொளியாம் விபூதியை ஊதியெறிந்தும் விரட்டும் ஒரு தேர்ந்த மந்திரவாதிபோல் உள்ளன.

சிறிதே மணிசேர் சிலம்பொலி கள்செய்யும் சீர்த்தவெண்ணால்
எறிந்தே திசைதொறும் எல்நக நீற்றால் இடும்பையெனும்
சிறியோன் பிசாசை செறுத்தோட்ட மந்திரம் செய்யியல்பை
அறிந்தோம் அடிகளில்! அன்னைகா மாட்சீ அணைந்தவர்க்கே!


சீர்த்த-சிறந்த; எண்-மந்திரம்; எல்-ஒளி; நீறு-விபூதி; இடும்பு-அகந்தை; செறுத்து-வென்று; அணைதல்-சேர்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...