ஜூலை 21, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -103

परां मनसि भावयन् प्रतिदिनं तु भट्टारिकां
पटन् स्तुतिमिमां जन​: प्रचितनामपारायण​:
सुधाकर कलान्चित​: सुरकदम्ब संसेवित​:
कलाय मुकुळच्छवि: भवति कामकोटी स्व्यम् १०३॥

பராம் மனஸி பாவயன் ப்ரதிதினம் து பட்டாரிகாம்
படன் ஸ்துதிமிமாம் ஜன: ப்ரசிதநாம பாராயண:
ஸுதாகர கலாஞ்சித: ஸுரகதம்ப ஸம்ஸேவித:
கலாய முகுளச்சவி: பவதி காமகோடீ ஸ்வய uம் || 103||

உயர்ந்தவளான பரதேவியை உள்ளத்தில் தினமும் தியானம்செய்து நாமத்தை ஓதி, இந்த துதி நூற்றை எவர் படிக்கின்றனரோ, தேவர்கள் துதிக்க, சந்திர கலையும் காசாம்பூ வண்ண மேனியனாக, காமகோடியாகவே ஆவரே!

உயர்பர தேவியை உள்ளம் தினந்தொறும் உன்னிநாமம்
பயனுணர்ந் தோதுவோர், பண்துதி நூறும் பசனையாற்றி
உயர்ந்தவர், தேவரும் உற்றுத் துதிக்க, ஒளிக்கலையாய்
கயவண்ண ராயவர், காமகோ டீயெனக் காணுவரே!

உன்னி-தியானித்து; ஒளி-சந்திரன்; கயம்-காசப்பூ

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


உயர் பரதேவியை உள்ளம் தினந்தொறும் உன்னி நாமம் பயனுணர்ந்து ஓதுவோர், பண் துதி நூறும் பசனையாற்றி உயர்ந்தவர், தேவரும் உற்றுத் துதிக்க, ஒளிக் கலையாய், கய வண்ணராய் அவர், காமகோடீயெனக் காணுவரே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...