ஜூலை 21, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -104

आर्यामेव विभावयन्मनसि यः पादारविन्दं पुरः
पश्यन्नारभते स्तुतिं नियतं लब्ध्वा कटाक्षच्छविम्
कामाक्ष्या मृदुलस्मितांशुलहरीज्योत्स्नावयस्यान्विताम्
आरोहत्यपवर्गसौधवलभीमानन्दवीचीमयीम् १०१॥

ஆர்யாமேவ விபாவயன்மனஸி : பாதா³ரவிந்த³ம் புர:
பஶ்யன்னாரபதே ஸ்துதிம் நியதம் லப்³த்வா கடாக்ஷச்ச²விம்
காமாக்ஷ்யா ம்ருʼது³லஸ்மிதாம்ஶுலஹரீஜ்யோத்ஸ்னாவயஸ்யான்விதாம்
ஆரோஹத்யபவர்க³ஸௌதவலபீமானந்த³வீசீமயீம் 104

ஆர்யையை மனத்தில் நினைத்து, பாதாரவிந்தம் முன்னிருப்பதாய் கொண்டு துதிப்பவன், கடைக்கண் ஒளியை உறுதியாகப் பெற்று, காமாக்ஷியின் மென்னகை ஒளியலையாம் நிலவைத் தோழியாகக் கொண்டதும், ஆனந்த அலைவீச்சாம் மோட்ச மாளிகையின் மேன்மாடத்தில் ஏறி அமர்வான்.

ஆர்யையன் னையை அகத்துள்ளித் தாள்மலர் அம்புஜமுன்
பார்த்துத் துதிப்போன், பகர்க்கண் கடையின் பலத்துடனும்
ஆர்த்தகா மாட்சியின் அம்மென் நகையெல் அரிசகியாய்,
ஆர்ப்பலை மோட்ச அரண்மணை மாடம் அமருவனே!

உள்ளி-நினைந்து; பகர்-ஒளி; பலம்-உறுதி; ஆர்த்து-நிறைவித்த; அம்-அழகு; எல்-ஒளி; அரி-நிலவு; சகி-தோழி; ஆர்ப்பு-ஆனந்தம்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

ஆர்யை அன்னையை அகத்து உள்ளித் தாள்மலர் அம்புஜமுன் பார்த்துத் துதிப்போன், பகர்க் கண்கடையின் பலத்துடனும் ஆர்த்த, காமாட்சியின் அம் மென்நகை எல் அரி சகியாய், ஆர்ப்பலை மோட்ச அரண்மணை மாடம் அமருவனே!

===============================****======================================
(இந்த ஸ்லோகத்தை ஒட்டியே, வரிசையமைப்பும், ஆர்யா, பாதாரவிந்த, ஸ்துதி, கடாக்ஷ, மந்தஸ்மித ஸதகங்கள் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது)
===============================****======================================

स्तुतिशतकं सम्पूर्णम्
ஸ்துதிஶதகம் ஸம்பூர்ணம்

श्री मूकपञ्चशती सम्पूर्णा
तत् सत्
ஶ்ரீ மூகபஞ்சஶதீ ஸம்பூர்ணா

தத் ஸத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...