ஜூலை 20, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -101

समरविजयकोटी साधकानन्दधाटी
मृदुगुणपरिपेटी मुख्यकादम्बवाटी
मुनिनुतपरिपाटी मोहिताजाण्डकोटी
परमशिववधूटी पातु मां कामकोटी १०१॥

ஸமரவிஜயகோடீ ஸாதகானந்த³தாடீ
ம்ருʼது³கு³ணபரிபேடீ முக்²யகாத³ம்ப³வாடீ
முனினுதபரிபாடீ மோஹிதாஜாண்ட³கோடீ
பரமஶிவவதூடீ பாது மாம் காமகோடீ 101

போரில் வெற்றிக் கொடியும், சாதகரின் மகிழ்ச்சிப் பெருக்கும், மென்மைப் பண்புக்கான பெட்டகமும், சிறந்த கடம்ப வனமிருப்பவளும், இருடிகளால் துதிக்கப்படும் மேன்மையுள்ளவளும், கோடி பிருமாண்டங்களை மயக்கி வைத்திருப்பவளும், பரசிவனின் மனைவியுமான காமகோடி என்னைக் காக்கட்டுமே!

செருவில் செயக்கொடி, சீர்த்தயோ கர்க்கலர், சீர்கயத்த
பெருங்குணப் பெட்டகம், பேறாம் கடம்பப் பெருவனத்தள்,
இருடிகள் போற்றி இறங்கு, அனைத்தண்டம் ஈர்த்திடுமாம்,
கருத்தன் சிவனாட்டி காமகோ டீயெனைக் காத்தருளே!

செரு-போர்; செயக்கொடி-வெற்றிக்கொடி, அலர்-மகிழ்ச்சி; கயம்-மென்மை; இருடிகள்-முனிவர்கள்; இறங்கு-பக்தியோடு வணங்கும்; கருத்தன்-கர்த்தா; ஆட்டி-மனைவி

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


செருவில் செயக் கொடி, சீர்த்த யோகர்க்கு அலர், சீர் கயத்த பெருங் குணப் பெட்டகம், பேறாம் கடம்பப் பெருவனத்தள், இருடிகள் போற்றி இறங்கு, அனைத்து அண்டம் ஈர்த்திடுமாம், கருத்தன் சிவனாட்டி காமகோடீ எனைக் காத்தருளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...