மே 28, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 50

पुरस्तान्मे भूयःप्रशमनपरः स्तान्मम रुजां
प्रचारस्ते कम्पातटविहृतिसम्पादिनि शिवे:
इमां याच्ञामूरीकुरु जाननि दूरीकुरु तमः-
परीपाकं मत्कं सपदि बुधलोकं नय माम् ५०॥

புரஸ்தான்மே பூ: ப்ரஶமன பர: ஸ்தான்மம ருஜாம்
ப்ரசாரஸ்தே கம்பாதட விஹ்ருʼதி ஸம்பாதி³னி ஶிவே:
இமாம் யாச்ஞாமூரீ குரு ஜனனி³ தூ³ரீகுரு தம:-
பரீபாகம் மத்கம் ஸபதி³ பு³லோகம் நய மாம் 50

கம்பைத் தடத்தில் விளையாடும் மங்களமே! அன்னையே! என்னுடைய உலகவாழ்வாம் வினைகளைத் தீர்க்கும் உன்னுடைய சஞ்சாரம் என்முன் தோன்றுக. இத் துதியை ஏற்பாயாக! என்னுடைய முதிர்ந்த அறியாமையை அகற்றி, விரைந்து, என்னை அமரருலகிற்கும் போகச் செய்வாயாக!

கம்பைத் தடத்தாடும் காமாட்சி தாய்மங் களமயமே!
எம்மிக வாழ்வின் இருவினை தீர்க்கும் இயக்கமுடன்
எம்முன்னர் தோன்றுக! இத்துதி ஏற்றெம் இருட்டகற்றி
எம்மை விரைந்து இமையார் உலகினில் ஏற்றுவயே!

ஆடும்-விளையாடு; இருவினை-நல்ல,தீய வினைகள்; இயக்கம்-சஞ்சாரம்; இருட்டு-அறியாமை; இமையார்-அமரர்.

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


கம்பைத் தடத்தாடும் காமாட்சி தாய் மங்களமயமே! எம்மிக வாழ்வின் இருவினை தீர்க்கும் இயக்கமுடன் எம்முன்னர் தோன்றுக! இத் துதி ஏற்று எம் இருட்டகற்றி எம்மை விரைந்து இமையார் உலகினில் ஏற்றுவயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...