மே 29, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 51

उदञ्चन्ती काञ्चीनगरनिलये त्वत्करुणया
समृद्धा वाग्धाटी परिहसितमाध्वी कवयताम्
उपादत्ते मारप्रतिभटजटाजूटमुकुटी-
कुटीरोल्लासिन्याः शतमखतटिन्या जयपटीम् ५१॥

உத³ஞ்சந்தீ காஞ்சீ நக³ர நிலயே த்வத்கருணயா
ஸம்ருʼத்³தா வாக்³தாடீ பரிஹஸித மாத்வீ கவயதாம்
உபாத³த்தே மார ப்ரதிபட ஜடாஜூட முகுடீ-
குடீரோல்லாஸின்யா: ஶதமக² தடின்யா ஜயபடீம் 51

காஞ்சிபுரத்துறைபவளே! உனது கருணையால், கவிகட்கு உண்டாகும் நிறைவான, அமுதத்தையும் பழிக்கும் சொல்வன்மை, மாரவைரியின் சடைமுடியாம் குடிசையில் உள்ளக்களிப்புடன் வாழும் கங்கையின் வெற்றிக்கொடியையும் பறிக்கிறது!

கவிகட்குன் அன்பால் கமமாய், அமுதும் கடைப்படுத்தும்
கவிவன்மை உண்டாக்கும், காஞ்சி யளேயக் கவித்திறன்கா
மவைரியார் வேணி மகுடக் குடிலில் மனங்களிக்கும்
தவகங்கை வெற்றித் தவழ்கொடி யும்கட்டல் தாம்செயுதே!

கமம்-நிறைவு; கடைப்படுத்தல்-இழிவு செய்தல்; வேணி-சடை; கட்டல்-பறித்தல்

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


கவிகட்கு உன் அன்பால் கமமாய், அமுதும் கடைப்படுத்தும் கவி வன்மை உண்டாக்கும், காஞ்சியளே, அக் கவித்திறன் காமவைரியார் வேணி மகுடக் குடிலில் மனங்களிக்கும் தவகங்கை வெற்றித் தவழ் கொடியும் கட்டல் தாம் செயுதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...