மே 26, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 48

वरीवर्तु स्थेमा त्वयि मम गिरां देवि मनसो
नरीनर्तु प्रौढा वदनकमले वाक्यलहरी
चरीचर्तु प्रज्ञाजननि जडिमानः परजने
सरीसर्तु स्वैरं जननि मयि कामाक्षि करुणा ४८॥

வரீவர்த்து ஸ்தே²மா த்வயி மம கி³ராம் தே³வி மனஸோ
நரீநர்த்து ப்ரௌடா வத³ன கமலே வாக்யலஹரீ
சரீசர்த்து ப்ரஜ்ஞா ஜனனி ஜடி³மா ந: பரஜனே
ஸரீஸர்த்து ஸ்வைரம் ஜனனி மயி காமாக்ஷி கருணா 48

தாயே! வாக்தேவியே! காமாக்ஷி! என் மனது உன்னிடம் நிலையாகட்டும்! கமலம்போலாம் வாக்கில் கம்பீரமான வாக்கின் வெள்ளமானது நன்கு நடனம் செய்யட்டும்! அறியாமை அகற்றி அறிவை அளிப்பவளே! உன்னை அணுகாதோர்க்கு அறிவின்மை உலவட்டும்; என்னிடமுன், தயையானது தன்னிச்சையாக, பெருகட்டும்.

என்மனம் உன்னிடம் என்றும் நிலைகொள்க! எல்லிமனை
அன்னவுன் வாக்கதன் ஆழ்சொல்வெள் ளம்நட்டம் ஆடுகவே!
அன்னைவாக் தேவி! அறிவீயும் காமாட்சி! அற்றுஞானம்
அன்றினார்க் கும்செய்துன் அன்பென்னில் தானாய் அரும்புகவே!

எல்லிமனை-தாமரை; ஆழ்-கம்பீரம்; சொல்-வாக்கு; நட்டம்-நடனம்; அறிவீயும்-அறிவு ஈயும்; அறிவைத் தரும்; அன்றினார்-பகைவர்,அன்னைபால் ஆட்படார்

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


என்மனம் உன்னிடம் என்றும் நிலைகொள்க! எல்லிமனை அன்னவுன் வாக்கதன் ஆழ் சொல் வெள்ளம் நட்டம் ஆடுகவே! அன்னை வாக்தேவி! அறிவு ஈயும் காமாட்சி! அற்று ஞானம் அன்றினார்க்கும் செய்து உன் அன்பு என்னில் தானாய் அரும்புகவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...