மே 25, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 47

दरिद्राणा मध्ये दरदलिततापिन्छ​सुषमाः
स्तनाभोगक्लान्तास्तरुणहरिणाङ्काङ्कितकचाः
हराधीना नानाविबुधमुकुटीचुम्बितपदाः
कदा कम्पातीरे कथय विहरामो गिरिसुते ४७॥

³ரித்³ராணா மத்யே ³ரத³லித தாபிஞ்² ஸுஷமா:
ஸ்தனாபோ³ க்லாந்தாஸ் தருணஹரிணாங்காங்கித கசா:
ஹராதீனா நானாவிபு³முகுடீ சும்பி³தபதா:³
கதா³ கம்பாதீரே கத² விஹராமோ கி³ரிஸுதே 47

மலைமகளே! இடை சிறுத்தும், சற்றே மலர்ந்த காயாம்பூவின் அழகுடைத்தும்,  தனச்சுமையால் களைப்புற்றும், இளம் சந்திரனை கேசத்தில் உடைத்தும், சிவனுக்கு வசப்பட்டவர்களும்,  தேவர்களின் மணிமுடிகளால் முத்தமிடப்பட்ட பாதங்களை உடையவரான யாம், கம்பைக் கரையில் எப்போது நின்னொடு விளையாடுவோமென்று சொல்லுவாயாக!

சிற்றிடை, காயாம்பூ சித்திரம் சற்றே சிரித்திடுதல்,
முற்றிய கொங்கை முசிப்பு, முடியில் முளைநிலவு
நெற்றிக்கண் ணர்வசம் நேர்ந்தண்டர் உண்ணீடம் நில்லடிகள்,
உற்றோம்!கம் பையடை உற்றாடல் என்றுசொல் உன்னுடனே!

சித்திரம்-அழகு; சிரித்தல்-மலர்தல்; முற்றிய-சுமையான; முசிப்பு-களைப்பு/சோர்வு; முளைநிலா-இளமதி; நேர்ந்து-உடன்படுதல்; அண்டர்-தேவர்; உண்ணீடம்-கிரீடம்; அடை-கரை/தடம்; ஆடல்-கேளி

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

சிற்றிடை, காயாம்பூ சித்திரம் சற்றே சிரித்திடுதல், முற்றிய கொங்கை முசிப்பு, முடியில் முளை நிலவும், நெற்றிக்கண்ணர் வசம் நேர்ந்து அண்டர் உண்ணீடம் நில்லடிகள், உற்றோம்! கம்பை அடை உற்று ஆடல் என்று சொல் உன்னுடனே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...