ஏப்ரல் 28, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 19

कालिन्दीजलकान्तयः स्मितरुचिस्वर्वाहिनीपाथसि
प्रौढध्वान्तरुचः स्फुटाधरमहोलौहित्यसन्ध्योदये
मणिक्योपलकुण्डलांशुशिखिनि व्यामिश्रधूमश्रियः
कल्याणैकभुवः कटाक्षसुषमाः कामाक्षि राजन्ति ते १९॥

காலிந்தீ³ ஜல காந்தய: ஸ்மிதருசி ஸ்வர்வாஹினீ பாத²ஸி
ப்ரௌடத்வாந்த ருச: ஸ்பு²டாதர மஹோலௌஹித்ய ஸந்த்யோத³யே
மணிக்யோபல குண்ட³லாம்ஶுஶிகி²னி வ்யாமிஶ்ர தூமஶ்ரிய:
கல்யாணைக பு: கடாக்ஷ ஸுஷமா: காமாக்ஷி ராஜந்தி தே 19

காமாக்ஷி! உன் மங்களமுள்ள கடைக்கண் காந்திகள், மென்னகை ஒளியாம் சுவர்க்க கங்கை வெள்ளத்தில் கலந்த யமுனையின் அழகைப்போலவும், மாலை நேர செம்மைப்போலாம் உதட்டழகோடு சேரும் கருத்த இருளொளி போன்றும், மாணிக்க குண்டலவொளி போன்றாம் தீவொளியின் புகைக்கூட்டம்போலவும் விளங்குகின்றன.

உங்கட் கடாட்ச ஒளிசுபம், காமாட்சி, ஒண்நகையாம்
கங்கைப் பெருக்கில் கலந்திடு காளிந்தி காந்தியைப்போல்
மங்குமா லைசெம்மை வாய்க்கரை சேர்கரு வாளிருள்போல்
செங்கற் குழையொளி தீப்புகைக் கூட்டம்போல் சீருறுதே!

கடாட்சம்- கடைக்கண்; சுபம்-மங்களம்; ஒண்நகை- ஒளிநகை; காளிந்தி-யமுனை; மங்குமாலை-சாயுங்காலம்; வாய்க்கரை-உதடு; வாள்-ஒளி; செங்கல்-மாணிக்கம்; குழை-குண்டலம்; சீர்-இயல்பு, புகழ்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


உங்கட் கடாட்ச ஒளி சுபம், காமாட்சி, ஒண்நகையாம், கங்கைப் பெருக்கில் கலந்திடு காளிந்தி காந்தியைப்போல், மங்கு மாலை செம்மை வாய்க்கரை சேர் கரு வாள் இருள்போல், செங்கற் குழையொளி தீப்புகைக் கூட்டம்போல் சீருறுதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...