ஏப்ரல் 27, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 18

यस्मिन्नम्ब भवत्कटाक्षरजनी मन्देऽपि मन्दस्मित-
ज्योत्स्नासंस्नपिता भवत्यभिमुखी तं प्रत्यहो देहिनम्
द्रक्षामाक्षिकमाधुरीमदभरव्रीडाकरी वैखरी
कामाक्षि स्वयमातनोत्यभिसृतिं वामेक्षणेव क्षणम् १८॥

யஸ்மின்னம்ப³! வத் கடாக்ஷ ரஜனீ மந்தே³பி மந்த³ஸ்மித-
ஜ்யோத்ஸ்னா ஸம்ஸ்னபிதா வத்யபிமுகீ² தம் ப்ரத்யஹோ தே³ஹினம்
த்³ரக்ஷாமாக்ஷிக மாதுரீ மத³ர வ்ரீடா³கரீ வைக²ரீ
காமாக்ஷி ஸ்வயமாதனோத்யபிஸ்ருʼதிம் வாமேக்ஷணேவ க்ஷணம் 18

தாயே! காமாக்ஷி! மென்னகையாம் நிலா நிறைந்த உனது கடைக்கண்ணாம் இரவானது, எந்த மூடன் மேல் படுமோ, அவனுக்கு இனிமையால் கருவம் கொண்ட திராட்சை, தேன் போற்றவற்றின் இனிமைச் செருக்கை அடக்கும் வாக்கின் வலிமை தானாகக் கணத்தில் காதல்வயப்பட்ட பெண்ணைப்போல் ஏற்படுமே!

மென்னகைச் சந்திரன் மேவுன் கடைக்கண் விபாவரியெப்
பன்னாடை யின்மேற் படுமோ, திராட்சை, பவித்திரத்தின்
இன்சுவை தற்கினை இற்றுச்செய் சொல்வலி ஏறிகணம்
தன்னில்கா தற்கொள்பெண் தானாவன் காமாட்சி தாயவளே!

மேவு-நிறை; விபாவரி- கருமிரவு; பன்னாடை-மூடன்; பவித்திரம்-தேன்; தற்கு-செருக்கு;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


மென்னகைச் சந்திரன் மேவுன் கடைக்கண் விபாவரி, எப் பன்னாடையின்மேற் படுமோ, திராட்சை, பவித்திரத்தின் இன்சுவை தற்கினை இற்றுச் செய் சொல் வலி, ஏறி கணம் தன்னில் காதற்கொள் பெண் தானாவன் காமாட்சி தாயவளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...