மார்ச் 28, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 88

स्वाभाव्यात्तव वक्त्रमेव ललितं सन्तोषसम्पादनं
शम्भोः किं पुनरञ्चितस्मितरुचः पाण्डित्यपात्रीकृतम्
अम्भोजं स्वत एव सर्वजगतां चक्षुःप्रियम्भावुकं
कामाक्षि स्फुरिते शरद्विकसिते कीदृग्विधं भ्राजते ८८॥

ஸ்வாபாவ்யாத் தவ வக்த்ரமேவ லலிதம் ஸந்தோஷஸம்பாத³னம்
ஶம்போ: கிம் புனரஞ்சித ஸ்மிதருச: பாண்டி³த்ய பாத்ரீக்ருʼதம்
அம்போஜம் ஸ்வத ஏவ ஸர்வஜக³தாம் சக்ஷு: ப்ரியம் பாவுகம்
காமாக்ஷி! ஸ்பு²ரிதே ஶரத்³விகஸிதே கீத்³ருʼக்³ விதம் ப்ராஜதே 88

காமாக்ஷி!  அழகு மிக்க உன்முகம் சிவனுக்கு இயல்பாய்  சிவனுக்கு மகிழ்வைத் தருவது.அழகிய புன்சிரிப்பென்னும் திறமைக்கு இருப்பிடமாகிவிட்டால் விளையும் இன்பத்திற்கு, கேட்கவும் வேண்டுமா? தாமரைப்பூ இயல்பிலேயே உலகில் கண்களுக்கு இன்பம் தருவது. சரத்காலத்தில் அது மலரும்போது அது மேலும் இன்பம் தந்துவிளங்குமே, அதைபோலவே!

இயல்பில் அழகாம்நின் இன்முகம் இன்பீயும் ஈசருக்கு!
வயக்குறு புன்னகை வல்லமை யால்மிகு மஞ்சுறும்பங்
கயமுமின் பின்கதி காமாட்சி ஞாலத்தில் கண்களுக்கு!
நயக்கும் சரதத்துன் நன்நகை  யன்ன நலமுடனே!

வயக்கு-ஒளி; மஞ்சு-அழகு; கதி-இயல்பு; சரதம்-சரத்காலம்; நயக்கும்-இனிமையுறும்

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


இயல்பில் அழகாம்நின் இன்முகம் இன்பீயும் ஈசருக்கு! வயக்குறு புன்னகை வல்லமையால் மிகு மஞ்சுறும் பங்கயமும் இன்பின் கதி, காமாட்சி ஞாலத்தில் கண்களுக்கு! நயக்கும் சரதத்துன் நன்நகையன்ன நலமுடனே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...