மார்ச் 27, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 87

जन्तूनां जनिदुःखमृत्युलहरीसन्तापनं कृन्ततः
प्रौढानुग्रहपूर्णशीतलरुचो नित्योदयं बिभ्रतः
श्रीकामाक्षि विसृत्वरा इव करा हासाङ्कुरास्ते हठा-
दालोकेन निहन्युरन्धतमसस्तोमस्य मे सन्ततिम् ८७॥

ஜந்தூநாம் ஜனி து:³² ம்ருʼத்யுலஹரீ ஸந்தாபனம் க்ருʼந்தத:
ப்ரௌடானுக்³ரஹ பூர்ண ஶீதல ருசோ நித்யோத³யம் பி³ப்ரத:
ஸ்ரீகாமாக்ஷி! விஸ்ருʼத்வரா இவ கரா: ஹாஸாங்குராஸ்தே ஹடா²-
தா³லோகேன நிஹன்யுரந்ததமஸ ஸ்தோமஸ்ய மே ஸந்ததிம் 87

காமாக்ஷி! மக்களின் பிறப்பு, துயரம், மரணம் என்று அலையலையாக வரும் துன்பங்களை நீக்கி, குன்றாத அருளெனும்,  அழிவற்ற முழுமதியின் உதயத்தைச் என்றும் கொண்டு, பரவி அணைக்கும் கரங்கள் போன்றவையுமாம்;  நின் புன்சிரிப்பின் துளிர்களின் ஒளியால், எனது அடர்ந்த மனவிருளின் தொடர்பை வலிந்து அழிக்கட்டுமே

மனிதர் பிறப்பு மனத்துயர் மற்றும் மரணமென்று
துனிதுயர் நீக்கிச் சுருங்கா அருளாம் துவஞ்சமற்ற
பனிவு தயமென்றும் பற்றி விரியுமாம் பாணியன்ன
உனின்நகை தூவல் ஒழிக்கட்டும் காமாட்சி, உள்ளிருளே!

துனி-வெறுக்கும்; துவஞ்சம்-அழிவு; பனி-நிலவன்; பற்றி-கொண்டு, பாணி-கை; தூவல்-தளிர்

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

மனிதர் பிறப்பு மனத்துயர் மற்றும் மரணமென்று, துனி துயர் நீக்கிச் சுருங்கா அருளாம் துவஞ்சமற்ற ,பனி உதயமென்றும் பற்றி, விரியுமாம் பாணியன்ன
உன் இன்நகை தூவல் ஒழிக்கட்டும் காமாட்சி, உள்ளிருளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...