மார்ச் 01, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 61

यान्ती लोहितिमानमभ्रतटिनी धातुच्छटाकर्दमैः
भान्ती बालगभस्तिमालिकिरणैर्मेघावली शारदी
बिम्बोष्ठद्युतिपुञ्जचुम्बनकलाशोणायमानेन ते
कामाक्षि स्मितरोचिषा समदशामारोढुमाकाङ्क्षते ६१॥

யாந்தீ லோஹிதிமான மப்ரதடினீ தாதுச்ச²டா கர்த³மை:
பாந்தீ பா³ல க³ஸ்தி மாலி கிரணை: மேகாவலீ ஶாரதீ³
பி³ம்போ³ஷ்ட² த்³யுதி புஞ்ஜ சும்ப³ன கலா ஶோணாயமானேன தே
காமாக்ஷி! ஸ்மிதரோசிஷா ஸமத³ஶாமா ரோடுமா காங்க்ஷதே 61

காமாக்ஷீ செங்கற்பொடியால் சேறுகளால் செந்நிறம் பெற்ற ஆகாய கங்கையும், இளஞ் சூரியனின் ஒளிகளால் சிவந்திருக்கும் சரத்காலத்திய மேகக்கூட்டமும், கோவைக் கனிபோன்ற இதழின் ஒளியோடு சேர்வதால், சிவந்த உன் இள நகையின் ஒளிக்கு ஒப்பாக ஆக ஆசைப்படுகிறது

செங்கற்தூள் சேற்றால் சிவந்தவான் கங்கையும், சேய்கதிரோன்
செங்கதிர் கூட்டால் சிவந்த சரத்கால செல்கணமும்,
செங்கொவ்வைப் போலுன் சிவந்த இதழொளி சேர்வதாலுன்
பொங்குமூ ரல்லெல் பொருவாசை காமாட்சீ போயுறுமே!

சேய்கதிரோன் -இளஞ்சூரியன்; செல்-மேக; கணம்-கூட்டம்; மூரல்-முறுவல்; எல்-ஒளி; பொரு-ஒப்ப;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

செங்கற்தூள் சேற்றால் சிவந்தவான் கங்கையும், சேய்கதிரோன் செங்கதிர் கூட்டால் சிவந்த சரத்கால செல்கணமும், செங்கொவ்வைப் போலுன் சிவந்த இதழொளி சேர்வதால் உன் பொங்கு மூரல் எல் பொரு ஆசை காமாட்சீ போயுறுமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...