பிப்ரவரி 28, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 60

जानीमो जगदीश्वरप्रणयिनि त्वन्मन्दहासप्रभां
श्रीकामाक्षि सरोजिनीमभिनवामेषा यतः सर्वदा
आस्येन्दोरवलोकेन पशुपतेरभ्येति सम्फुल्लतां
तन्द्रालुस्तदभाव एव तनुते तद्वैपरीत्यक्रमम् ६०॥

ஜானீமோ ஜக³தீ³ஶ்வர ப்ரணயினி த்வன் மந்த³ஹாஸ ப்ரபாம்
ஸ்ரீகாமாக்ஷி! ஸரோஜினீமபினவாமேஷா யத: ஸர்வதா³
ஆஸ்யேந்தோ³ரவலோகேன பஶுபதேரப்யேதி ஸம்பு²ல்லதாம்
தந்த்³ராலு: தத³பா ஏவ தனுதே தத்³வைபரீத்யக்ரமம் 60

உலகீசர்க்கினியாளே! காமாக்ஷி! உனது மென்னகை ஒளியை புதிய தாமரைத்தொகுதியாக நினைக்கிறோம். எனெனில் இந்த புன்னகையானது எப்போதும் பசுபதியினுடைய முகமான சந்திரனுடைய பார்வையினால் மலர்ச்சியை அடைகிறது! அது இல்லாத நேரத்தே மடிகொண்டு, மலர்வின்மையை அடைகிறது!

உலகீ சருவப்பே! உன்மென் நகையின் ஒளிபுதிய
சலசத் தொகுதியாய் சங்கையெ மக்காகும்! சந்ததமும்
மலரும் பசுபதி மண்டிலப் பார்வை வதனமதால்;
மலராமல் கூம்பும் மடியிலே காமாட்சீ! மற்றபோதே!

உலகீசர்-ஜகதீசர்; உவப்பு-மனதிற்கினியது; சலசம்-தாமரை; சங்கை-எண்ணம்; மண்டிலம்-சந்திரன்; மடி-சோம்பல்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


உலகீசர் உவப்பே! உன் மென்நகையின் ஒளி, புதிய சலசத் தொகுதியாய் சங்கை எமக்காகும்! சந்ததமும் மலரும் பசுபதி மண்டிலப் பார்வை வதனமதால்! மலராமல் கூம்பும் மடியிலே காமாட்சீ! மற்றபோதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...