பிப்ரவரி 27, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 59

सम्भिन्नेव सुपर्वलोकतटिनी वीचीचयैर्यामुनैः
संमिश्रेव शशाङ्कदीप्तिलहरी नीलैर्महानीरदैः
कामाक्षि स्फुरिता तव स्मितरुचिः कालाञ्जनस्पर्धिना
कालिम्ना कचरोचिषां व्यतिकरे कांचिद्दशामश्नुते ५९॥

ஸம்பின்னேவ ஸுபர்வலோகதடினீ வீசீசயைர் யாமுனை:
ஸம்மிஶ்ரேவ ஶஶாங்கதீ³ப்திலஹரீ நீலைர் மஹானீரதை:³
காமாக்ஷி! ஸ்பு²ரிதா தவ ஸ்மிதருசி: காலாஞ்ஜனஸ்பர்தினா
காலிம்னா கசரோசிஷாம் வ்யதிகரே காம்சித்³³ஶாமஶ்னுதே 59

காமாக்ஷி! யமுனையின் அலைக் கூட்டங்களுடன் கலந்த தேவலோக நதியாம் கங்கைபோலும், கரும் பெரும் முகில்களுடன் சேர்ந்த சந்திரனது ஒளிப்பெருக்கினைப் போலவும், வெளிப்படும் உன்புன்னகையின் ஒளி, கருமையுடன் போட்டியிடும் உனது குழற்கதிர்களின் கருமையுடன் இணையும்போது, ஈதென்று கூறவியலாத ஒரு தனித்தன்மையைப் பெறுகிறது.

கருநதி வங்கம் கலந்தவான் ஆறதாம் கங்கைபோலும்
கருமுகில் சேர்ந்த களங்கன் ஒளியலைக் காந்திபோலும்
வருமுன் முறுவல்வாள், மால்பொரு தும்குழற் மாலிணைந்து
ஒருசொல் லொணாத உயர்நிலை, காமாட்சி! உற்றிடுதே!

கருநதி-யமுனை/காளிந்தி; வங்கம்-அலை; வான் ஆறு- தேவநதி; களங்கன் - சந்திரன்; வாள்-ஒளி/காந்தி; மால்-கருமை; பொருது-போட்டியிடும்

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


கருநதி வங்கம் கலந்த வான் ஆறதாம் கங்கைபோலும், கருமுகில் சேர்ந்த களங்கன் ஒளியலைக் காந்திபோலும், வருமுன் முறுவல் வாள், மால் பொருதும் குழற் மால் இணைந்து, ஒரு சொல்லொணாத உயர்நிலை, காமாட்சி! உற்றிடுதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...