பிப்ரவரி 26, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 58

यन्नाकम्पत कालकूटकबलीकारे चुचुम्बे यद्-
ग्लान्या चक्षुषि रूषितानलशिखे रुद्रस्य तत्तादृशम्
चेतो यत्प्रसभं स्मरज्वरशिखिज्वालेन लेलिह्यते
तत्कामाक्षि तव स्मितांशुकणिकाहेलाभवं प्राभवम् ५८॥

ந்நாகம்பத காலகூட கப³லீகாரே சுசும்பே³ யத்³-
க்³லான்யா சக்ஷுஷி ரூஷிதானல ஶிகே² ருத்³ரஸ்ய தத்தாத்³ருʼஶம்
சேதோ யத் ப்ரஸபம் ஸ்மர ஜ்வர ஶிகி²ஜ்வாலேன லேலிஹ்யதே
தத் காமாக்ஷி தவ ஸ்மிதாம்ஶு கணிகா ஹேலாபவம் ப்ராபவம் 58

காமாக்ஷி! எந்த மனதானது காலகூட நஞ்சருந்தும்போதும் நடுங்கவில்லையோ, எக்கண்கள் நெருப்புக் கொழுந்தால் களைக்கவில்லையோ, அத்தகு உருத்திரனின் மனதும், காமவெப்பமென்னும் தீக்கொழுந்தால் வலிந்து ஆளப்படுவதென்பது உன்னுடைய மந்தகாசக் கதிர்த் துளியின் விளையாட்டால் ஏற்படும் மான்மியமே!

காமாட்சீ!  எவ்வுள்ளம் காலகூ டத்தையுண் காலையுமஞ்
சாமலெக் கண்கள் தணற்கொழுந் தாலும் தகைத்தலுறா
தாமோவவ் வீசனார் தம்முள்ளும் ஆளும் தணற்கொழுந்துன்
பூமென் நகைக்கதிர்ப் பொட்டதன் ஆட்டின்  பொழிலதுவே!

காலகூடம்-கொடிய நஞ்சு; தணற் கொழுந்து - தீக்கொழுந்து;  தகைத்தல்- களைப்புறுதல்; கதிர்-கிரணம்; பொட்டு-துளி; ஆட்டு-விளையாட்டு; பொழில்-கீர்த்தி/பெருமை;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


காமாட்சீ!  எவ்வுள்ளம் காலகூடத்தை உண்காலையும் அஞ்சாமல், எக்கண்கள் தணற் கொழுந் தாலும் தகைத்தலுறாதாமோ, அவ் வீசனார் தம் உள்ளும் ஆளும் தணற்கொழுந்து உன் பூ மென்நகைக் கதிர்ப் பொட்டதன் ஆட்டின் பொழிலதுவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...