மார்ச் 02, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 62

श्रीकामाक्षि मुखेन्दुभूषणमिदं मन्दस्मितं तावकं
नेत्रानन्दकरं तथा हिमकरो गच्छेद्यथा तिग्मताम्
शीतं देवि तथा यथा हिमजलं सन्तापमुद्रास्पदं
श्वेतं किंच तथा यथा मलिनतां धत्ते मुक्तामणिः ६२॥

ஸ்ரீகாமாக்ஷி முகே²ந்து³பூஷணமித³ம் மந்த³ஸ்மிதம் தாவகம்
நேத்ரானந்த³கரம் ததா² ஹிமகரோ ³ச்சே²த்³ யதா² திக்³மதாம்
ஶீதம் தே³வி! ததா² யதா² ஹிமஜலம் ஸந்தாபமுத்³ராஸ்பத³ம்
ஶ்வேதம் கிம்ச ததா² யதா² மலினதாம் த்தே முக்தாமணி: 62

ஸ்ரீ காமாக்ஷி! தேவி! உனது சந்திரனைப் போன்ற முகத்திற்கு நகையாக அமைந்த இந்த புன்னகை, சந்திரனே சூடாகியது போன்று கண்களுக்கு மகிழ்ச்சியையும், பனி நீரும் வெப்பம் தருவாதாகி விட்டாற்போல் அவ்வளவு குளிர்ச்சியுள்ளது. மேலும் நல்முத்து அழுக்கானதுபோல் வெண்மையாக கொண்டது.

மதிபோலாம் நின்றன் வதனத் தணிநின்றன் மந்தகாசம்
மதிவெப்புற் றார்போல் மகிழ்ச்சியை கண்கட்கும் மஞ்சுநீரும்
கொதிக்குமாப் போலே குளிர்வும் கொடுக்கும்; குருட்டுமுத்தின்
சிதியையும் காமாட்சீ தேவீ! உடைத்த சிறப்புடைத்தே!

மந்தகாசம்- மென்னகை; வெப்பு-தாபம்/வெப்பம்; மஞ்சுநீர்-பனிநீர்; கொதி-வெப்பம்; குருட்டுமுத்து-ஒளியிழந்த முத்து; சிதி-வெண்மை

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

மதி போலாம் நின்றன் வதனத்தணி நின்றன் மந்தகாசம் மதி வெப்புற்றார்போல் மகிழ்ச்சியை கண்கட்கும் மஞ்சுநீரும், கொதிக்குமாப் போலே குளிர்வும் கொடுக்கும்; குருட்டு முத்தின் சிதியையும் காமாட்சீ தேவீ! உடைத்த சிறப்புடைத்தே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...