பிப்ரவரி 02, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 34

कम्रेण स्नपयस्व कर्मकुहनाचोरेण मारागम-
व्याख्याशिक्षणदीक्षितेन विदुषामक्षीणलक्ष्मीपुषा
कामाक्षि स्मितकन्दलेन कलुषस्फोटक्रियाचुञ्चुना
कारुण्यामृतवीचिकाविहरणप्राचुर्यधुर्येण माम् ३४॥

கம்ரேண ஸ்னபயஸ்வ கர்ம குஹனா சோரேண மாராக³-
வ்யாக்²யா ஶிக்ஷண தீ³க்ஷிதேன விது³ஷாமக்ஷீண லக்ஷ்மீ புஷா
காமாக்ஷி! ஸ்மித கந்த³லேன கலுஷ ஸ்போ²டக்ரியா சுஞ்சுனா
காருண்யா ம்ருʼத வீசிகா விஹரண ப்ராசுர்ய துர்யேண மாம் 34

காமாக்ஷியே! அழகு பொருந்தியதாயும், கரும கவடினைத் திருடுவதாயும், காம சாத்திரத்தை விரித்துக் கூறும் ஆற்றலுள்ளதாயும், கற்ற அறிஞர்களுக்கு, வற்றா செல்வத்தை விருத்தி செய்வதும், பாவத்தை அழிக்கும் திறமையுள்ளதும், கருணையெனும் அமுத வெள்ளத்தில் விளையாடலை முனைந்து செய்வதாம், உன் புன்சிரிப்பால் என்னை முழுக்காட்டித் தூய்மையாக்கு!

காமாட்சீ! ஐகொள்ளும், கன்மக் கவடைக் கவர்ந்திடுமாம்,
காமநூல் வித்தாரம் கற்பிக்கும், கற்றோர்க்குக் கன்றிடாத
வாமம் வளர்க்கும்,பா வம்தீர்த் தருள்மது வாரியாடும்
நேமமாம் நின்நகை நெய்யாட்டி என்னைசெய் நிர்மலமே!

ஐ-அழகு; கன்மம்-கருமம்; கவடு-வஞ்சம்; கவர்தல்-பறித்தல்; வித்தாரம்-விரிவு; கன்றிடாத-குறையாத; வாமம்-செல்வம்; தீர்த்து-ஒழித்து; அருள்மது-கருணையமுதம்; வாரி-வெள்ளம்; ஆடும்-விளையாடும்; நேமம்-உறுதியோடு கடைபிடித்தல்; நெய்யாட்டி-முழுக்காட்டி (எண்ணை நீராட்டல்); நிர்மலம்-தூய்மை;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


காமாட்சீ! ஐகொள்ளும், கன்மக் கவடைக் கவர்ந்திடுமாம், காமநூல் வித்தாரம் கற்பிக்கும், கற்றோர்க்குக் கன்றிடாத வாமம் வளர்க்கும், பாவம் தீர்த்(து) அருள் மதுவாரி ஆடும் நேமமாம் நின்நகை நெய்யாட்டி என்னை செய் நிர்மலமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...