பிப்ரவரி 03, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 35

त्वन्मन्दस्मितकन्दलस्य नियतं कामाक्षि शङ्कामहे
बिम्बः कश्चन नूतनः प्रचलितो नैशाकरः शीकरः
किंच क्षीरपयोनिधिः प्रतिनिधिः स्वर्वाहिनीवीचिका-
बिब्वोकोऽपि विडम्ब एव कुहना मल्लीमतल्लीरुचः ३५॥

த்வன்மந்த³ ஸ்மித கந்த³லஸ்ய நியதம் காமாக்ஷி ஶங்காமஹே
பி³ம்ப:³ கஶ்சன நூதன: ப்ரசலிதோ நைஶாகர: ஶீகர:
கிம்ச க்ஷீரபயோ நிதி: ப்ரதினிதி: ஸ்வர்வாஹினீ வீசிகா-
பி³ப்³வோகோபி விட³ம்ப³ ஏவ குஹனா மல்லீ மதல்லீ ருச: 35

காமாக்ஷியே! உன்னுடைய மென்னகை அழகில் வெளிப்பட்ட நீர்த்துளியே சந்திரனுடைய விம்பமென்றும், மேலும் பாற்கடலே கூட அதன் சார்பான உருவென்றும், அதன்முன் ஆகாயகங்கையின் அலையழகும் நகைப்புக்குரியதென்றும், சிறந்த மல்லிகையின் அழகும் கூட ஏமாற்றே என்றும் ஐயுறுகிறோம்.

உன்மென் னகையம்மில் உண்டான சீகரி ஒண்மதிய
தன்விம்பம் தானோ?பாற் தாழியோ? ஆகா சகங்கையலை
தன்னழ கும்சக்காந் தத்துக்கோ? நன்கலர் சந்தியைப்பூ
வின்னாரும் தெத்தோ? விதர்க்கமே! காமாட்சீ வீங்குளத்தே

அம்-அழகு; சீகரி-நீர்திவலை; ஒண்மதி-ஒளி நிலவு; விம்பம்-உருவம்; பாற்தாழி-பாற்கடல்; சக்காந்தம்-கேலிக்கு; சீர்-அழகு; சந்தியைப்பூ-மல்லிகைப் பூ; ஆர்-அழகு; தெத்து-ஏமாற்று; விதர்க்கம்-ஐயம்; வீங்குளத்தே-இங்கு உளத்தே!

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


உன் மென்னகை அம்மில் உண்டான சீகரி ஒண் மதியதன் விம்பம்தானோ? பாற்தாழியோ? ஆகாச கங்கை அலைதன் அழகும் சக்காந்தத்துக்கோ? நன்கலர் சந்தியைப் பூவின் ஆரும் தெத்தோ? விதர்க்கமே! காமாட்சீ வீங்குளத்தே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...