ஜனவரி 31, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 32

कर्मौघाख्यतमःकचाकचिकरान्कामाक्षि संचिन्तये
त्वन्मन्दस्मितरोचिषां त्रिभुवनक्षेमंकरानङ्कुरान्
ये वक्त्रं शिशिरश्रियो विकसितं चन्द्रातपाम्भोरुह-
द्वेषोद्धेषोणचातुरीमिव तिरस्कर्तुं परिष्कुर्वते ३२॥

கர்மௌகாக்²யதம:கசா கசிகரான் காமாக்ஷி ஸம்சிந்தயே
த்வன் மந்த³ஸ்மிதரோசிஷாம் த்ரிபுவன க்ஷேமம் கரானங்குரான்
யே வக்த்ரம் ஶிஶிரஶ்ரியோ விகஸிதம் சந்த்³ராத பாம்போருஹ-
த்³வேஷோத்³தேஷோணசாதுரீமிவ திரஸ்கர்தும் பரிஷ்குர்வதே 32

காமாக்ஷீ! குளிர்ந்த எப்புன்சிரிப்பு, நிலவு, தாமரைகள் மீது இயல்பிலே கொண்டுள்ள பகையை பறைசாற்றுவதை மறைக்க, மலர்ந்த முகத்தை மேலும் மலர்த்திச் செய்கிறதோ, வினைகளாம் இருளை அழித்து, மூவுலகுக்கும் நலந்தருகிறதோ, அதன் துளிர்களை தியானம் செய்கிறேன்.

வினையிருள் மாய்த்து, வியனூழி மூன்றுக்கும் வித்தகஞ்செய்
நினதின் நகையே, நிலாதா மரைமேல் நிறங்குணமாம்
முனைவினைச் சாற்றா வொளித்து, மலர்த்தும் முகத்தைமேலும்!
நினைந்தத் தளிர்நகை, நிட்டையில் காமாட்சீ நிற்பனானே!

மாய்த்து-அழித்து; வியன் ஊழி-வியன் உலகு; வித்தகம்-நன்மை; நிறங்குணம்-இயல்பு; முனைவினை-பகைமை; சாற்றா-கூறாமல்; நிட்டை-தியானம்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)

வினை இருள் மாய்த்து வியன் ஊழி மூன்றுக்கும் வித்தகஞ்செய், நினது இன் நகையே நிலா, தாமரைமேல் நிறங்குணமாம் முனைவினைச் சாற்றா ஒளித்து மலர்த்தும் முகத்தைமேலும்! நினைந்து அத்தளிர்நகை, நிட்டையில் காமாட்சீ நிற்பன் நானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...