ஜனவரி 30, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 31

चेतः शीतलयन्तु नः पशुपतेरानन्दजीवातवो
नम्राणां नयनाध्वसीमसु शरच्चन्द्रातपोपक्रमाः
संसाराख्यसरोरुहाकरखलीकारे तुषारोत्कराः
कामाक्षि स्मरकीर्तिबीजनिकरास्त्वन्मन्दहासाङ्कुराः ३१॥

சேத: ஶீதலயந்து : பஶுபதேரானந்த³ ஜீவாதவோ
நம்ராணாம் நயனாத்வ ஸீமஸு ஶரச்சந்த்³ராத போபக்ரமா:
ஸம்ஸாராக்²ய ஸரோருஹாகர க²லீகாரே துஷா ரோத்கரா:
காமாக்ஷி ஸ்மர கீர்த்தி பீ³ஜ நிகராஸ்த்வன் மந்த³ ஹாஸாங்குரா: 31

காமாக்ஷீ! பசுபதியின் பேரின்பத்திற்கு உயிர் நிலையானதும், துதிப்போரின் விழிகள் விழுமிடமெல்லாம் சரத்கால நிலவு முளைப்பது போன்றவையும், சம்சாரம் என்னும் தாமரைக் குவியலைக் கருகச் செய்வதில் கடும்பனி போன்றதும், மன்மதனின் புகழை விளைக்கும் வித்துகள் போன்றவையுமான உன்னிளம் புன்னகைத் தளிர்கள் எமதுள்ளம் குளிர்விக்கட்டும்!

பசுபதி யின்பேரின் பத்திற் குயிர்நிலைப் பாங்குமுன்னை
விசைத்துத் துதிப்போர் விழிசெல் லுமிடம் விளைசரத
சசியும்சம் சாரகஞ் சங்கள்தீய்க் கின்றதௌ சாரமும்வேள்
இசைவீயா முன்நகை என்னுள்தண், காமாட்சீ, ஏற்றுகவே

விசைத்து-பற்றுக்கோடாய் கொண்டு; கஞ்சம்-தாமரை; சரத சசி- சரத்கால நிலா; தௌசாரம்-பனி; வேள்-மாரன்; இசை-புகழ்; வீயம்-விதை;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


பசுபதியின் பேரின்பத்திற்கு உயிர் நிலைப்பாங்கும், உன்னை விசைத்துத் துதிப்போர் விழிசெல்லுமிடம் விளை சரத சசியும், சம்சார கஞ்சங்கள் தீய்க்கின்ற தௌசாரமும் வேள் இசைவீயாம் உன்நகை என்னுள் தண், காமாட்சீ, ஏற்றுகவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...