ஜனவரி 29, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 30

विश्वेषां नयनोत्सवं वितनुतां विद्योततां चन्द्रमा:
विख्यातो मदनान्तकेन मुकुटीमध्ये संमान्यताम्
आः किं जातमनेन हाससुषमामालोक्य कामाक्षि ते
कालङ्कीमवलम्बते खलु दशां कल्माषहीनोऽप्यसौ ३०॥

விஶ்வேஷாம் நயனோத்ஸவம் விதனுதாம் வித்³யோததாம் சந்த்³ரமா:
விக்²யாதோ மத³னாந்தகேன முகுடீமத்யே ஸம்மான்யதாம்
: கிம் ஜாதமனேன ஹாஸ ஸுஷமாமாலோக்ய காமாக்ஷி! தே
காலங்கீமவலம்ப³தே ²லு ³ஶாம் கல்மாஷ ஹீனோப்யஸௌ 30

காமாக்ஷீ! சந்திரன் எல்லோர் கண்களுக்கும் மகிழ்ச்சியளிக்கட்டும்; கீர்த்தி பெற்றவனாக இருக்கட்டும்; மாரவைரியால் மகுடத்தில் வைத்து பெருமைப்படுத்தப்படட்டும்; அதனால் அவனுக்கு என்ன பெருமை? இவன் களங்கமற்றவனாக இருந்தபோதிலும், உனது புன்முறுவலின் அழகைக் கண்டு களங்கனானே!

கலையோன் அனைவர்கண் கட்கும் மகிழ்வை கனிந்துகீர்த்தி
தலைதலா கட்டும்! தருப்பகன் வைரியும் தன்மைசெய்க,
தலைசூடி! என்ன தகைமை மதிக்கதால்? தாம்மையொன்றும்
அலனாயின் காமாட்சீ! அம்முன் நகையால்மை ஆயினானே!

கலையோன்-சந்திரன்; தலைதல்-மேன்மையாதல்; தருப்பகன்-மன்மதன்; வைரி-எதிரி (தருப்பகன்வைரி-சிவன்); தன்மை-பெருமை; தகைமை-பெருமை; மை-களங்கம்; அம்-காந்தி/அழகு

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


கலையோன் அனைவர் கண்கட்கும் மகிழ்வை கனிக; கீர்த்தி தலைதல் ஆகட்டும்! தருப்பகன் வைரியும் தன்மை செய்க, தலைசூடி! என்ன தகைமை மதிக்கு அதால்? தாம் மையொன்றும் அலன், ஆயின் காமாட்சீ! அம்முன் நகையால் மை ஆயினானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...