ஜனவரி 28, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 29

पीयूषं तव मन्थरस्मितमिति व्यर्थैव साऽपि() प्रथा
कामाक्षि ध्रुवमीदृशं यदि भवेदेतत्कथं वा शिवे
मन्दारस्य कथालवं सहते मथ्नाति मन्दाकिनिं
इन्दुं निन्दति कीर्तिते कलशीपाथोधिमीर्ष्यायते २९॥

பீயூஷம் தவ மந்த²ர ஸ்மிதமிதி வ்யர்தை² ஸாபி(ப) ப்ரதா²
காமாக்ஷி த்ருவமீத்³ருʼஶம் யதி³ வேதே³தத் கத²ம் வா ஶிவே
மந்தா³ரஸ்ய கதா²லவம் ஸஹதே மத்²னாதி மந்தா³கினீம்
ந்து³ம் நிந்த³தி கீர்திதே கலஶீ பாதோ²திமீர்ஷ்யாயதே 29

மங்களமானவளே! காமாக்ஷி! உன்னுடைய மென்னகை அமுதமென்னுமந்த புகழ்ச்சியும் வீணே!  அவ்வாறு அது உண்மையாயின் மந்தார மலர் என்னும் சொல்லைக்கூட ஏனது பொறுப்பதில்லை? கங்கையை கலக்குவானேன்? நிலவைப் பழிப்பதேன்? பாற்கடலென்றாலே பொறாமை கொள்வதேன்?

மங்கல மானகா மாட்சியுன் மென்னகை, மாந்தமுதாய்
அங்குபு கழ்தல்வீண்! அவ்வா றதுண்மையும் ஆயினேனோ
கங்கைக் கலக்கல்? களங்கன் பழித்தல்?பாற் கார்க்கடல்மீ
தங்குகவ் வையும்?மந் தாரப்பூச் சொல்லுமேன் தாங்கிடாதே!

மாந்த-அருந்த; களங்கன்-சந்திரன்; கார்-மேகம்; கவ்வை-பொறாமை; தாங்கிடாமை-பொறுக்காமை

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


மங்கலமான காமாட்சி!உன் மென்னகை, மாந்த+அமுதாய் அங்கு புகழ்தல் வீண்! அவ்வாறு+அது+உண்மையும் ஆயின்+ஏனோ கங்கைக் கலக்கல்? களங்கன் பழித்தல்? பாற்கார்க்கடல் மீதங்கு கவ்வையும்? மந்தாரப்பூச் சொல்லும் ஏன் தாங்கிடாதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...