ஜனவரி 27, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 28

प्रेङ्खत्प्रौढकटाक्षकुञ्जकुहरेष्वत्यच्छगुच्छायितं
वक्त्रेन्दुच्छविसिन्धुवीचिनिचये फेनप्रतानायितम्
नैरन्तर्यविजृम्भितस्तनतटे नैचोलपट्टायितं
कल्माषं कबलीकरोतु मम ते कामाक्षि मन्दस्मितम् २८॥

ப்ரேங்க²த்ப்ரௌடகடாக்ஷகுஞ்ஜகுஹரேஷ்வத்யச்ச²கு³ச்சா²யிதம்
வக்த்ரேந்து³ச்ச²விஸிந்துவீசிநநிசயே பே²னப்ரதானாயிதம்
நைரந்தர்யவிஜ்ருʼம்பிதஸ்தனதடே நைசோலபட்டாயிதம்
கல்மாஷம் கப³லீகரோது மம தே காமாக்ஷி மந்த³ஸ்மிதம் 28

காமாக்ஷி! ஒளிவீசும் கம்பீர கடாட்சப் புதருள், மிகவும் வெண்மையான பூங்கொத்து போன்றதும், மதிவதன காந்தியாம் கடலலைக் கூட்டத்தில் நுரைக்கொத்து போன்றதும், இடைவெளியின்றி பருத்த தனங்கள்மீதுள்ள வெண்பட்டு கச்சையுமாயும் காணப்படும் உன் புன்சிரிப்பு என் பாபத்தைத் தொலைக்கட்டுமே!

காமாட்சீ அஞ்சுகொள் கம்பீரத் தூறாம் கடைவிழிக்குள்
தூமிகு வெண்மைத் துணராம், மதிமுகச் சோதியன்ன
பாமக் கடலலை பவ்வமாம், நீங்கா பருத்தமார்கள்
தாமேல்வெண் பட்டுக்கச் சையாம்ந கைதீர்க்க சாவரமே!

அஞ்சு-ஒளி; தூறு-புதர்; துணர்-பூங்கொத்து; பாமம்-ஒளி; பவ்வம்-நுரை; சாவரம்-பாவம். தீர்க்க!-அவிக்கட்டும்; நகை-புன்னகை;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


காமாட்சீ அஞ்சுகொள் கம்பீரத் தூறாம் கடைவிழிக்குள், தூமிகு வெண்மைத் துணராம், மதிமுகச் சோதியன்ன பாமக் கடலலை பவ்வமாம், நீங்கா பருத்தமார்கள்தாமேல் வெண்பட்டுக் கச்சையாம், நகை தீர்க்க! சாவரமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...