செப்டம்பர் 02, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 84

कामाक्षि नित्यमयमञ्जलिरस्तु मुक्ति-
बीजाय विभ्रममदोदयघूर्णिताय
कन्दर्पदर्पपुनरुद्भवसिद्धिदाय
कल्याणदाय तव देवि दृगञ्चलाय 84

காமாக்ஷி நித்யமயமஞ்ஜலிரஸ்து முக்தி-
பீஜாய விப்ரம மதோதய கூர்ணிதாய |
கந்தர்ப தர்ப புனருத்பவ ஸித்திதாய
கல்யாணதாய தவ தேவி த்ருகஞ்சலாய ||84||

தேவி காமாக்ஷி! முத்திக்கு வித்தாயதும், அழகின் அகந்தையால் சுழல்வதும், அனங்கனின் அகந்தை மீண்டும் தோன்றி நிலைபெறச் செய்வதும், மங்களத்தின் உருவாகவே இருப்பதுமாய உன் கடைக்கண்களுக்கு என்றும் இவ்வஞ்சலி இருக்கட்டும்.

அமுதின் விதையாம், அழகின் செருக்கில் அலைவதுவாம்,
அமுத னெதிரி அனங்கன் அகந்தையை ஆங்குமீண்டும்
குமிழ்த்தொ ருநிலை கொளச்செய் வதாம்தங் குமங்களமே
கமழ்கண் களுக்கென்றும் காமாட்சீ அஞ்சலி கைதொழுதே


அமுது - முத்தி; அமுதன் - சிவன்; அனங்கன் - மன்மதன்; குமிழ்த்து - கொழித்து; கமழ்-மணத்தல்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...