செப்டம்பர் 03, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 85

दर्पाङ्कुरो मकरकेतन विभ्रमाणां
निन्दाङ्कुरो विदळितोत्पल चातुरीणाम्
दीपाङ्कुरो भवतमिस्र कदम्बकानां
कामाक्षि पालयतु मां त्वदपाङ्गपातः 85

தர்பாங்குரோ மகரகேதன விப்ரமாணாம்
நிந்தாங்குரோ விதளிதோத்பல சாதுரீணாம் |
தீபாங்குரோ பவதமிஸ்ர கதம்பகானாம்
காமாக்ஷி பாலயது மாம் த்வதபாங்கபாத: ||85||

காமாக்ஷியே! மன்மதனின் விளையாடல்களின் அகந்தைக்கு காரணமாயதும், மலர்ந்த கருநெய்தல் பூக்களின் அழகைப் பழிப்பதும், பவத்தின் இருளுக்கு தீபச்சுடர்போல் இருப்பதுமாம் உனது கடைக்கண் பார்வையானது என்னைக் காப்பாற்றட்டும்.

உருவிலி கேளியில் உண்டா யசெருக்கின் ஓரிடையும்
விரிகரு நெய்தற்பூ விஞ்சும் அழகும் வினைபவத்தின்
இருளை விலக்கிட ஏற்றுஞ் சுடர்போல் இருக்குமுன்றன்
கருணை கடைக்கண்ணால் காமாட்சி செய்கநீ காத்தருளே!


உருவில்-மன்மதன்; கேளி-விளையாட்டு; இடை-காரணம்; விரி-மலர்தல்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...