செப்டம்பர் 27, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 8

विरावैर्माञ्जीरैः किमपि कथयन्तीव मधुरं
पुरस्तादानम्रे पुरविजयिनि स्मेरवदने
वयस्येव प्रौढा शिथिलयति या प्रेमकलह-
प्ररोहं कामाक्ष्याः चरणयुगली सा विजयते ८॥

விராவை: மாஞ்ஜீரை: கிமபி கத²யந்தீவ மதுரம்
புரஸ்தாதா³ ம்ரே புரவிஜயினி ஸ்மேர வத³னே
வயஸ்யேவ ப்ரௌடா ிதி²லயதி யா ப்ரேம கலஹ-
ப்ரரோஹம் காமாக்ஷ்யா: சரணயுக³லீ ஸா விஜயதே 8

எப்பாதங்கள், தாமணிந்த சிலம்புகளின் ஒலியால் எதோவொன்றை இனிமையாகப் பேசுவது போலிருந்து, புன்னகையுடன் எதிர்வந்து வணங்கும் புராரியிடத்தே கொண்ட ஊடலின் முளையை மிகவும் திறமையுள்ள தோழியைப்போல, தளரச் செய்து நீக்கிவிடுகிறதோ, காமாட்சியின் அவ்விரு பாதங்களும் ஒளிபெற்று விளங்குகின்றன.

புன்னகை பூத்தெதிர் புக்கு வணங்கும் புராரியிடம்
அன்னைகொள் ஊடல் அடிமுளை நீக்கும் அரும்சகிபோல்
இன்சிலம் பின்னொலி ஏதோ மொழியும் இனிமைபூத்து

மின்னும்கா மாட்சியின் மேலாம் இருபாத மேன்மைகளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...