செப்டம்பர் 28, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 9

सुपर्वस्त्रीलोलालकपरिचितं षट्पदकुलैः
स्फुरल्लाक्षारागं तरुणतरणिज्योतिररुणैः
भृतं कान्त्यम्भोभिः विसृमरमरन्दैः सरसिजैः
विधत्ते कामाक्ष्याः चरणयुगलं बन्धुपदवीम् ९॥

ஸுபர்வ ஸ்த்ரீ லோலாலக பரிசிதம் ஷட்பத³ குலை:
ஸ்பு²ரல் லாக்ஷாராக³ம் தருண தரணி ஜ்யோதிரருணை:
ப்ருʼதம் காந்த்யம்போபி: விஸ்ருʼமர மரந்தை:³ ஸரஸிஜை:
விதத்தே காமாக்ஷ்யா: சரண யுக³லம் ³ந்துபத³வீம் 9

வணங்கும் தேவமகளிரின் அசையும் கூந்தல்களோடு கூடியதும், ஒளிரும் செம்பஞ்சுக் குழம்பால் சிவந்ததும்,  இளஞ்சூரியனின் கதிர்போன்று செம்மையொளி படர்ந்த நீரினால் நிறைந்ததாயுமுள்ள காமாக்ஷியின் இரு பாதங்களும், வண்டுகளோடும், பூந்தாது நிறைந்த தாமரைகளோடும் உறவு கொள்கிறது

கும்பிடு தேவர்தம் கோதை யராடும் குழல்கலந்து
செம்பஞ்சுச் சேறால் சிவந்ததும், வீசிடும் செங்கதிரோன்
செம்மை ஒளிபடர்ச் சீதமாம் காமாட்சீ சீரடிகள்
தும்பியை, பூந்தா துறைத்தா மரையினைத் துவ்விடுதே!

சீதம்-நீர்; கலந்து-கூடி; சேறு-குழம்பு; தும்பி-வண்டு; பூந்தாது-மகரந்தம்; துவ்வுதல்-பற்றுக்கோடு/உறவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...