ஆகஸ்ட் 31, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 82

नीलोत्पलप्रसवकान्तिनिर्दशनेन
कारुण्यविभ्रमजुषा तव वीक्षितेन
कामाक्षि कर्मजलधेः कलशीसुतेन
पाशत्रयाद्वयममी परिमोचनीयाः 82

நீலோத்பல ப்ரஸவ காந்தி நிதர்னேன
காருண்ய விப்ரமஜுஷா தவ வீக்ஷிதேன |
காமாக்ஷி கர்மஜலதே: கலஶீஸுதேன
பாத்ரயாத் வயமமீ பரிமோசனீயா: ||82||

காமாக்ஷீ! கருநெய்தல் மலரின் ஒளிக்கு ஒப்பானதும், கருணையின் அழகினால் நிறைந்ததும், வினைக்கடலுக்கு அகத்தியர்போன்றதுமாம், உனது கடைக்கண் பார்வையால் நாங்கள் மூன்று பாசங்களிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்!

கருநெய்தல் பூவதன் காந்திக்கு ஒப்பாம், கருணையது
பெருகி நிறைந்ததால் பேரழ கும்கூடப் பெற்றதுவாம்,
கருமக் கடலுக் ககத்தியர் போலாம்நின் கண்கடையால்
அருள்ககா மாட்சீ அழிந்துமுப் பாசமும் அற்றிடவே!

கருநெய்தல் - நீலோத்பலம்; கருமக்கடல்-வினைக்கடல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...