ஆகஸ்ட் 30, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 81

कामाक्षि कोऽपि सुजनास्त्वदपाङ्गसङ्गे
कण्ठेन कन्दळितकाळिमसम्प्रदायाः
उत्तंसकल्पितचकोरकुटुम्बपोषा
नक्तन्दिवप्रसवभूनयना भवन्ति 81
காமாக்ஷி கோபி ஸுஜனாஸ்த்வதபாங்க ஸங்கே
கண்டேன கன்தளித காளிம ஸம்ப்ரதாயா: |
உத்தம்ஸகல்பித சகோர குடும்பபோஷா
நக்தன்திவ ப்ரஸவபூ நயனா பவந்தி ||81||

ஹே காமாக்ஷி! சில புண்ணியர்கள் உனது பார்வையின் தொடர்பின் மகிமையால், கழுத்தில் கருநீலமடைகிறார்கள்; தலையணியாகச் சகோரப் பறவைகளின் குடியை காப்போனான, சந்திரனை தரிக்கிறார்கள்; இரவு, பகல்களை உண்டு பண்ணக்கூடிய கண்களை உடைத்திருக்கிறார்கள்; அம்பிகையின் கடைக்கண் அருளைப் பெற்ற பரமசிவனை இப்பாடல் வருணிக்கிறது.

நின்பார்வை சார்ச்சியின் நீர்மையால் கண்டத்தில் நீலமதும்,
சென்னியில் பூணென சேர்ந்த, சகோரம தின்குடிக்கு
இன்காப் பெனவாகும் இந்தையும், நாள்நிசி என்றுசெய
தன்கண் களும்,சுகிர் தர்சிலர், காமாட்சீ! தாம்பெறுமே!


சார்ச்சி - தொடர்புல்- நீர்மை-சிறந்த குணம்; கண்டம்-கழுத்து; சென்னி-தலை; பூண்- அணி; இந்து-சந்திரன்; சுகிர்தர்-புண்ணியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...