ஜூலை 27, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 47

कैवल्यदाय करुणारसकिङ्कराय
कामाक्षि कन्दलितविभ्रमशङ्कराय
आलोकनाय तव भक्तशिवङ्कराय
मातर्नमोस्तु परतन्त्रितशङ्कराय 47

கைவல்யதாய கருணாரஸ கிம்கராய
காமாக்ஷி கந்தளித விப்ரம ம்கராய |
ஆலோகனாய தவ பக்த ஶிவம்கராய
மாதர் நமோஸ்து பரதந்த்ரித ம்கராய ||47||

தாயே! காமாக்ஷி! முக்தி அளிப்பதும், கருணையமுதை தன் பணியாளராகக் கொண்டதும், சங்கரருக்கு மோகலீலையை மிகச்செய்வதும், அன்பருக்கு மங்களத்தைச் செய்வதும், பரமசிவனைப் தன்வயமாகுவதுமாம் உன்னுடைய பார்வைக்கு வணக்கங்கள்!

காமாட்சீ! தாயே கனியும் நெறியாமுன் கண்கடைகள்
காமாரிக் கேமோ கமிகச் செயுமாம்; கருணையூற்றை
தாமே வலராய் தனக்குறும்; மங்கலம் தந்திடுமாம்;
சோமரை தன்வயத் துற்றதை சேவிப்பேன் சோதியளே


நெறி - முக்தி; காமாரி - சிவன்; ஏவலர்- பணியாள்; சோமன்-சிவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...