ஜூலை 26, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 46

प्रेमापगापयसि मज्जनमारचय्य
युक्तः स्मितांशुकृतभस्मविलेपनेन
कामाक्षि कुण्डलमणिद्युतिभिर्जटालः
श्रीकण्ठमेव भजते तव दृष्टिपातः 46

ப்ரேமாபகா பயஸி மஜ்ஜனமாரசய்ய
யுக்த: ஸ்மிதாம்ஶு க்ருத பஸ்மவிலேபனேன |
காமாக்ஷி குண்டல மணி த்யுதிபிர் ஜடால:
ஸ்ரீகண்டமேவ பஜதே தவ த்ருஷ்டிபாத: ||46||

காமாக்ஷி! உன் கடைக்கண்ணாது, அன்பெனும் ஆற்று நீரில் குளித்துவிட்டு, வெண்மையான புன்சிரிப்பாம் நீறணிந்து, உன் காதிலுள்ள குழைகளின் ஒளிக்கதிர்களாகிய முடிக்கற்றை அணிந்து இருப்பதுபோல் விளங்கி பரமசிவனையே வழிபடுகிறது.

அன்பெனும் ஆற்றில் அமிழ்ந்தாடி காமாட்சி அன்னையுந்தன்
மின்கடைக் கண்கள், மிளிர்வெண் நகைநீறு மீதணிந்து
உன்செ வியின்குழை ஒண்க திராஞ்சடை உற்றணிந்து
மன்னாம் பரசி வனாரை வணங்கி வழிபடுதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...