ஜூன் 30, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 20

माहात्म्यशेवधिरसौ तव दुर्विलङ्घ्य-
संसारविन्ध्यगिरिकुण्ठनकेलिचुञ्चुः
धैर्याम्बुधिं पशुपतेश्चुलकीकरोति
कामाक्षि वीक्षणविजृम्भणकुम्भजन्मा 20

மாஹாத்ம்ய ஶேவதிரஸௌ தவ துர்விலங்க்ய-
ஸம்ஸார விந்த்யகிரி குண்டன கேலிசுஞ்சு: |
தைர்யாம்புதிம் ஶுபதேஶ்சுலகீ கரோதி
காமாக்ஷி வீக்ஷண விஜ்ரும்பணகும்பஜன்மா ||20||

ஹே காமாக்ஷி, மகத்துவம் நிறைந்த உன்னுடய கடைக்கண் வீச்சாம் கும்பமுனி, கடப்பதற்கரிய விந்திய மலையினைக்கு கருவத்தை அடக்கும் விளையாட்டை வேடிக்கையாக நிகழ்த்தியவர்; பசுபதியாம் இறைவனின் தீரமாம் கடலை உள்ளங்கையளவு நீராகச் செய்தவர்.

மகத்து நிறைநின் மலர்க்கடைக் கண்வீச்சாம் மாமுனிவர்
அகத்தியர், விந்தியத்தின் ஆண வம்கொய்யும் ஆட்டமதை
நிகழ்த்திப், பசுபதி நெஞ்சுர மாகடல் நீர்முழுதும்
அகங்கை யதனில் அடக்கினார், காமாட்சீ! அற்புதமே

அகங்கை - உள்ளங்கை; ஆட்டம்- விளையாட்டு; கொய்யும்-நீக்கும்/அடக்கும்; 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...