ஜூலை 01, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 21

पीयूषवर्ष शिशिरा स्फुटदुत्पलश्री-
मैत्री निसर्गमधुरा कृततारकाप्तिः
कामाक्षि संश्रितवती वपुरष्टमूर्तेः
ज्योत्स्नायते भगवति त्वदपाङ्गमाला 21

பீயூஷ வர்ஷ ஶிஶிரா ஸ்புடத் உத்பலஸ்ரீ-
மைத்ரீ நிஸர்க மதுரா க்ருத தாரகாப்தி: |
காமாக்ஷி ஸம்ஶ்ரிதவதீ வபுரஷ்டமூர்தே:
ஜ்யோத்ஸ்னாயதே பகவதி த்வதபாங்கமாலா ||21||

பகவதியே காமாட்சீ! உன்னுடைய கடைக்கண் வரிசை நிலவைப்போல், அமுதப்பொழிவால் குளிர்ந்தது; அன்றலர்ந்த கருவாம்பல் பூவின் அழகுக்கு, நட்பு பூண்டது; இயல்பாய் இனியது; தாரகைக்கூட்டம் வரை பரவியது; எண்மூர்த்தியாம் சிவனுடலை தன்னிருப்பாய் கொண்டது;

அமுதத்தா ரையின் அளிகொள்நின் கண்கடை ஆவளிகள்,
அமைவாம் மலர்கரு ஆம்பற் குநட்பாம்; அருச்சிகமாம்
இமிழாம் இயல்பினில் எண்மூர்த் தியுடலும் எய்திடுமாம்;
கமலே! பகவதீ! காமாட்சீ! நீளும் கணம்வரையே


அளி - குளிர்ச்சி; அமுதத்தாரை - அமுதப்பொழிவு; ஆவளிகள் - வரிசைகள்; அமைவு - அழகு; கருவாம்பல் - கருநெய்தல்; அருச்சிகம் - நிலவு; இமிழ் - இனிமை; கணம்வரை - நட்சத்திரங்கள்வரை;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...