மே 29, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 89

उर्वीधरेन्द्रकन्ये दर्वीभरितेन भक्तपूरेण
गुर्वीमकिञ्चनार्ति खर्वीकुरुषे त्वमेव कामाक्षि 89

உர்வீதரேந்த்ர கந்யே தர்வீபரிதேன பக்தபூரேண |
குர்வீம் அகிம்சனார்திம் கர்வீகுருஷே த்வமேவ காமாக்ஷி ||89||

காமாட்சி தாயே! மலையரசன் மகளே! உணவு படைக்க அன்னக் கரண்டியால் நீ எடுத்த அன்ன வெள்ளத்தால் ஏழைகளின் கொடிய துயராம் பசியைப் போக்கடித்து விடுகிறாய் (அன்னபூரணியாக) நீயே!

மலைவேந்து பெற்ற மகளாய தாயேகா மாட்சியேநீ
குலைப்பாய் தரித்திரர் கும்பிகள் காய்க்கும் கொடும்பசித்தீ!
அலகிலா அன்னம்! அளிப்பதோ வெள்ளமாய் அன்னையேயுன்
அலகில் அகப்பையில் அன்பதன் ஆற்றலோ அற்புதமே!

குலைப்பாய் - கெடுப்பாய்; கும்பி - வயிறு; அகப்பை - கரண்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...