மே 28, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 88

श्रवणचलद्वेतण्डा समरोद्दण्डा धुतासुरशिखण्डा
देवि कलितान्त्रषण्डा धृतनरमुण्डा त्वमेव चामुण्डा 88

ஶ்ரவண சலத் வேதண்டா ஸமரோத்தண்டா துதாஸுரஶிகண்டா |
தேவி கலிதாந்த்ரஷண்டா த்ருத நரமுண்டா த்வமேவ சாமுண்டா ||88||

காதுகளை அசைத்துக்கொண்டிருக்கிற யானைகளை உடையவளும், போரில் வேகமாக இருப்பவளும், அசுரர் தலைகளைப் பந்தாடி, அவர்கள் குடல்களை உருவி மாலைகளாக அணிந்தவளும், நரனின் வெட்டுண்ட தலையைக் கையிலேந்தியவளான சாமுண்டா தேவி நீயே!  ஶ்ரவண சலத் வேதண்டா” என்பதை, காதுகளில் ஆடும் தந்தக்குழைகளைக் கொண்டவள் என்றும் பொருள் கொள்ளலாம்.

அசைகின்ற காதுடை ஆனைகள் கொண்டாய்; அமர்களத்தில்
விசையுடைத் தாய்;வீங்கு வீண சுரர்களை வீழ்த்திடுவாய்;
தசையோ டவர்குடல் தாமம்பூண் சாமுண்டீ தாயேநின்கை
மிசையில் நரன்சிரம் வெட்டியே ஏந்துவாய் மிண்டவளே


தாமம் - மாலை;  மிசை - மேல்; விசை - வேகம், உக்கிரம்; மிண்டவள் - வலிமிக்கவள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...