ஏப்ரல் 29, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 59

परिणततीं चतुर्धा पदवीं सुधियां समेत्य सौषुम्नीम्
पञ्चाशदर्णकल्पितमदशिल्पां तां नमामि कामाक्षि 59

பரிணதவதீம் சதுர்தா பதவீம் ஸுதியாம் ஸமேத்ய ஸௌஷும்னீம் |
பஞ்சாசதர்ண கல்பித தசில்பாம் தாம் நமாமி காமாக்ஷி ||59||


ஞானிகளுடைய சுழுமுனை (ஸூஷும்நை) வழியிலே நான்குவித வேறுபட்ட (பரா, பச்யந்தீ, மத்யமா, வைகரீ) வாக்கின் உருவங்களை அடைந்தவளும், ஐம்பது எழுத்துக்களாலான சொற்களில் அமைந்தவளுமான, காமாட்சியை நான் வணங்குகிறேன்.

ஞானியர் காட்டிடும் நன்றாம் சுழுமுனை நாடிவழி
தானிருப் பாள்தேவி தன்நால் விதமாய தாமுருவில்
நானிலத் தேவாக்கில்; நல்லைம் பதுகீறும் நல்குவதாம்
தேனினி சொற்களில் தேசாம்கா மாட்சியை சேவிப்பனே

சுழுமுனை - ஸூஷும்னா; கீறு - எழுத்து; தேசு - ஒளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...