ஏப்ரல் 26, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 56

आहितविलासभङ्गीमाब्रह्मस्तम्बशिल्पकल्पनया
आश्रितकाञ्चीमतुलामाद्यां विस्फूर्तिमाद्रिये विद्याम् 56

ஆஹித விலாஸ பங்கீம்- ஆப்ரஹ்ம-ஸ்தம்ப-சில்ப-கல்பனயா |
ஆச்ரித காஞ்சீம் அதுலாம்-ஆத்யாம் விஸ்பூர்திம் ஆத்ரியே வித்யாம் ||56||


பிரமன் முதலாய் புழு வரை எல்லா உயிர்களையும் சிற்பமென சிருட்டிக்கும் தன்னுடைய லீலைகளில் பலவித தோற்றங்களை காட்டுபவளும், காஞ்சிபுரியை விரும்பியவளும், பிரமத்தின் முதல் உணர்ச்சியான சிருட்டிப்பதாக தாமே இருப்பதும், ஒப்பற்றதுமாய ஞான உருவம் கொண்டவளை சார்ந்திருக்க விரும்புகிறேன்.

பிரமன் முதலாய் பிறக்கும் புழுக்களீறாய் சிற்பம்போல்
உருவாய் பலசெய்யும் உன்னதக் கைவண் ணமுடையாளும்
பிரமம தன்முதற் பேருணர் வாய பெரும்பொருளும்
புரையற்றாள், காஞ்சீ புரிவாழும் பேரறிவைப் புக்கேனே

புரையற்றாள்- இவளை ஒத்தவொன்றில்லாதவள்; புக்கேனே - சரணமென புகுந்தேனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...