ஏப்ரல் 25, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 55

ऐक्षिषि पाशाङ्कुशधरहस्तान्तं विस्मयार्हवृत्तान्तम्
अधिकाञ्चि निगमवाचां सिद्धान्तं शूलपाणिशुद्धान्तम् 55

ஐக்ஷிஷி பாசாங்குசதர ஹஸ்தாந்தம் விஸ்மயார்ஹ வ்ருத்தாந்தம் |
அதிகாஞ்சி நிகமவாசாம் ஸித்தாந்தம் சூலபாணி சுத்தாந்தம் ||55||


பாசம், அங்குசம் இவற்றை கையிலேந்தியவளும், வியத்தகு சரித்திரத்தை உடையவளும், மறைமொழிகளுக்கு முடிவாய தத்துவமாய் இருப்பவளும், சூலமேந்திய சிவனின் அந்தப்புரமாய (புனித அகமாக) ஸ்ரீ காமாட்சியை காஞ்சீபுரியில் நான் பார்த்தேன். லலிதா சஹஸ்ரநாமம், “அநகா அத்புத சாரித்ரா” என்கிறது.

கயிற்றொடு தாறினைக் கையேந்தி காக்கின்ற காட்சியளை
வியக்கத் தகவாம் விருத்தாந்த கள்கொண்ட வித்தகியை
நயமாம் மறைமுடி ஞானத்தை சூலக்கை நாதசிவன்
நயக்கும் அகத்தை நகர்காஞ்சி யில்கண்டேன் நான்மகிழ்ந்தே!

கயிறு - பாசம்; தாறு - அங்குசம்; விருத்தாந்தம் - சரித்திரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...