மார்ச் 29, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 28

एणशिशुदीर्घलोचनमेनःपरिपन्थि सन्ततं भजताम्
एकाम्रनाथजीवितमेवम्पददूरमेकमवलम्बे 28

ஏண சிசு தீர்க்கலோசனம் ஏன: பரிபந்த்தீ ஸந்ததம் நமதாம் |
ஏகாம்ரநாத ஜீவிதம் ஏவம்பததூரம் ஏகம் அவலம்பே ||   (28)

மான்குட்டியினைப் போன்ற நீண்ட கண்களை உடையதும், எப்போதும், வணங்கும் பக்தர்களின் தீவினைகளுக்கு தடையாயிருந்து நீக்குவதும், ஏகாம்ரநாதருடைய உயிராயிருப்பதும்,  இத்தகையள் என்று சொல்வதற்கு எட்டாததுமான ஒரு பரம்பொருளை பற்றுக்கோடாக கொண்டேன். (தம்முயிரை விட தாமீன்ற உயிரையே பெற்றோர் பேணிக் காப்பர் என்பதால் கவியின் வாக்கை இன்னும் ஏற்றிச் சொல்லப்பட்டது)

மான்மறி போல்நீண்ட மைவிழி கொண்டு வணங்குமன்பர்
தான்செய் வினைத்தீ தனைத்தும் அகற்றும் தயையுமாகி
தான்சென் றொருமா தருவின்கீழ் வீற்றார் தமக்குயிராம்
ஊன்றினை உன்னவும் ஒண்ணாளைப் பற்றாய் உணர்ந்தனனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...