மார்ச் 28, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 27

उररीकृतकाञ्चिपुरीमुपनिषदरविन्दकुहरमधुधाराम्
उन्नम्रस्तनकलशीमुत्सवलहरीमुपास्महे शम्भोः 27

உரரீக்ருத காஞ்சி புரீம் உபநிஷதரவிந்த குஹர மது தாராம் |
உன்னம்ர ஸ்தனகலசீம் உத்ஸவலஹரீம் உபாஸ்மஹே சம்போ:  || (27)

காஞ்சீபுரியை தன்னுடையதாக உறுதிகொண்டவள்; உபநிடதங்களாகிய தாமரையின் நடுவிலிருந்து பெருகும் தேன் போன்றவளும், உயர்ந்து கலசங்களைப்போன்ற மார்பகங்கள் கொண்டவளும், மகிழ்வைத் தரும் பரமசிவனுடைய பேரானந்தத்தின் அலைபோன்றவளும், ஆகிய காமாக்ஷியை வழிபடுவோம்.

தவகாஞ் சிபுரி தனதென் றுரிமை தனைநிறுத்தும்,
உவந்திடும் தேனாய் உபநிடத் தாமரை உள்பெருக்கும்,
கவரும் உயர்ந்த கலசமாய் மார்பகக் காட்சியுடை,
சிவனார் மகிழ்வின் திரையினை வந்தித் திருமனமே

திரை- அலை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...